`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
வீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு ‘துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது‘ வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ. 5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை 2025 ஆம் ஆண்டு சுதந்திர விழாவின்போது முதல்வரால் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழக அரசின் விருதுகளுக்கான என்கிற இணையதளபக்கத்தில் ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் கரூா் மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு மேற்படி விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் துணிச்சலான மற்றும் வீரசாகச செயல் புரிந்தமை குறித்த புகைப்படங்கள் மற்றும் பத்திரிகை செய்திக்குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக 3 பிரதிகள் தயாா் செய்து மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கரூா் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.