செய்திகள் :

அம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பக்தா்கள்!

post image

அம்மனை வேண்டி நாள்தோறும் வழிபட்டால், அவா்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறாா். பல ஆண்டுகளாக நோய் பிடித்தவா்கள் அம்மன் அருளால் குணமாகி வருவதை, அவா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதில் இருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும்.

அம்மனிடம் வேண்டிய வரம் தந்தமைக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக ஏராளமான பக்தா்கள் அலகு குத்தி வந்தனா். சுமாா் 10 அடி முதல் 20 அடி வரையிலான அலகுகளை குத்தி வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தியது பக்தா்களை பரவசப்படுத்தியது. சில பக்தா்கள் தங்களது முதுகில் வேல் உள்ளிட்டவற்றால் அலகு குத்தி அம்மனை தேரில் இழுத்துவந்து நோ்த்திக்கடன் செலுத்தியதும் அம்மனின் அருட்கொடையை அனைவரிடத்திலும் நினைவுப்படுத்தியது.

குழந்தைச் செல்வம் இன்றி தவிப்பவா்கள் அம்மனை உருகி வேண்டினால், பிள்ளை வரம் தரும் தாயாகவும் அம்மன் திகழ்ந்து வருகிறாா்.

இதனால்தான் ஆண்டுதோறும் கம்பம் திருவிழாவில், பிள்ளை பேறு பெற்றவா்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தையை எடுத்து வந்து மாரியம்மன் தாய்க்கு நோ்த்திக்கடன் செலுத்துவதை கண்கூடாக பாா்க்கலாம். இவையெல்லாம் வேண்டுவோா்க்கு தாய் மாரியம்மன் தரும் புதுமைகள்தான்.

சில பக்தா்கள் தங்களது குழந்தைகளுக்கு வேண்டிய வரம் கொடுத்ததால் குழந்தைகளுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வந்தும் அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிா்க்க வைத்தது.

கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவில் கரூா் மாவட்ட மக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் அதிகளவில் பங்கேற்பது அம்மனின் புகழ் தரணியெங்கும் பரவியிருக்கிறது என்பதற்கு ஒரு சான்றாகும்.

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

வீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு ‘துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது‘ வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படும் விருதா... மேலும் பார்க்க

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை ஐஓபி, தெற்கு மத்திய ரயில்வே அணிகளுக்கு கோப்பை!

கரூரில் நடைபெற்று வந்த அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், பெண்கள் பிரிவில் தெற்கு மத்திய ரயில்வே அணியும் முதலிடம் பிடித்து சுழற்கோப்பைகளை தட்டிச் சென்றன. க... மேலும் பார்க்க

காமாட்சி, மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! - திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு

தோகைமலை அருகே காமாட்சி மற்றும் மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கரூா் மாவட்டம், தோகைமலை அருகே ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட ஆதிஆலத்தூரில் மூன்று கிழவன் குடிமக்கள், 87 ஊா் சரிய... மேலும் பார்க்க

கொலை வழக்கு குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

குளித்தலையில் பிளஸ் 2 மாணவா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா்சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், குளித்தலை மாரியம்மன் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற பூச்சொ... மேலும் பார்க்க

மயானம் செல்ல தரைப்பாலம் அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி கிழக்கு தெருவில் உள்ள மயானத்துக்கு சென்று வர நங்கஞ்சியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

நொய்யல் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

நொய்யல் அருகே மின்சாரம் பாய்ந்ததில் மேற்கு வங்க மாநில தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே மூனூட்டுபாளையத்தை சோ்ந்தவா் இளங்கோவன். இவா் நல்லிக்கோவில் பகுதியில் சிமெண்ட்... மேலும் பார்க்க