செய்திகள் :

என்கவுன்டரில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் ஷூட்டர் கொலை!

post image

உத்தரப் பிரதேசத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஷூட்டரை காவல்துறையினர் வியாழக்கிழமை என்கவுன்டர் செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச சிறப்பு காவல் படை மற்றும் தில்லி போலீஸ் இணைந்து நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்ட லாரன்ஸ் குழுவைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர், கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் என்று காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹாபூர் கோட்வாலி பகுதியில் புதன்கிழமை இரவு சட்டவிரோத கும்பலைத் தேடிச் சென்ற சிறப்புப் படையைச் சேர்ந்த காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நவீன் குமார் என்ற குற்றவாளி படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்த நவீன் குமார், காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு ஷூட்டராக பணிபுரிந்து வருபவர் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லி காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியது, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திகியை கொலை செய்தது உள்ளிட்ட சம்பவத்துக்கு காலிஸ்தான் பயங்கரவாதியான லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : தாய் மீது பாட்டிலை வீசினார் அன்புமணி: கண்கலங்கிய ராமதாஸ்!

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க