நகைக்கடன் விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன்
சென்னை: நகைக் கடன் குறித்த ஆர்பிஐ விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்குப் பொருந்தாது என்று தமிழக அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம் கொடுத்துள்ளார்.
நகைக் கடனுக்கு, ஆர்பிஐ புதிய வரைவு விதிமுறைகளை உருவாக்கியிருப்பது, நாடு முழுவதும் பல்வேறு தரப்பு மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ஆர்பிஐ விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு நகைக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் ஆள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.