செய்திகள் :

விருதுநகர்: `100 கிடாய்கள், 150 சேவல்கள்… சுடச்சுட பறிமாறப்பட்ட அசைவ விருந்து’ - படையெடுத்த ஆண்கள்

post image

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ளது மறையூர். இங்குள்ள பனந்தோட்டத்தில் மாசாணம் சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் இக்கோயில் திருவிழா நடைபெறும். திருவிழாவிலும், திருவிழாவை முன்னிட்டு நடக்கும் அசைவ விருந்திலும் ஆண்கள் மட்டுமே பங்கு கொள்வார்கள்.

அசைவ சமையல்

தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் வகையில் கிடா, சேவல்களை காணிக்கையாக செலுத்துவார்கள். நள்ளிரவில் கறிசோற்றினை மண் சட்டியில் வைத்து மண் சட்டியுடன் வானத்தை நோக்கி நடைபெறும் எரி பூஜை நடைபெற்றது. எரி பூஜைக்குப் பிறகு கிடாக்கள், சேவல்கள் வெட்டப்பட்டு வெட்டப்பட்ட குழிக்குள் ரத்தம் விடப்பட்டது.

பின்னர், அந்த ரத்தக்குழியை மூடினர். 20 அண்டாக்களில் சாதம் சமைக்கப்பட்டது. அதிகாலை 5 மணியில் இருந்தே விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரண்டனர்.

சமைக்கப்பட்ட சாதம்

மதியம் 12 மணிக்குள்ளேயே விருந்து நிறைவடைந்தது. விருந்து முடிவடைந்ததும் எஞ்சியுள்ள சாதம், கிடா குழம்பு, சேவல் கறி ஆகியவற்றை ஊர் எல்லையில் தோண்டப்பட்ட குழியில் போட்டு மூடப்பட்டது. மதுரையைச் சேர்ந்த பக்தர் கருப்பசாமியிடம் பேசினோம், “வைகாசி மாதம் என்றாலே எங்களுக்கு மாசணம் சுவாமி கோயில் திருவிழாதான் நினைவுக்கு வரும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவிற்கு நண்பர்களுடன் தவறாமல் வந்துவிடுவோம்.

ஊர் மக்கள் அனைவரும் தரையில் அமர்ந்து உண்ணும் இந்த விருந்தின் சுவைக்கு எல்லையே இல்லை. மாசாணம் சுவாமியை மனமுருகி வேண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பொருள் திருட்டு, வழக்குகளில் இழுபறி, இரு தரப்பு சண்டை உள்ளிட்ட பிரச்னைகள் தீர இக்கோயிலில் மாசாணம் சுவாமி முன்பு நிற்க வைத்து பிரச்னைகளை முடித்துவிடுவார்கள்.

கறி விருந்து

தொழில் மற்றும் வியாபார ஒப்பந்தங்கள்கூட இந்த சுவாமி முன்பு பேசி முடிக்கப்படுகிறது. பல ஊர்களில் இருந்தும் பைக்குகளிலும் கார்களிலும் இக்கோயிலுக்கு படையெடுத்து வந்துள்ளார்கள். 1 கி.மீ தூரத்திற்கு வரிசையாக அமர வைத்து பசியாற விருந்து வழங்கப்பட்டுள்ளது” என்றார்.   

ஸ்ரீவைகுண்டம்: 108 திவ்ய தேசம், நவதிருப்பதிகளில் சூரியன் தலமான கள்ளபிரான் திருக்கோயில்| Photo Album

108 திவ்ய தேசங்கள்.! நவ திருப்பதி.! சிறப்பு பெற்ற ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில்.! மேலும் பார்க்க

திருச்செந்தூர்: பனங்கிழங்கின் பீலியை நீக்கிவிட்டு உண்ணும் தெய்வானை; ஆச்சரியத்தில் பக்தர்கள்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேச... மேலும் பார்க்க

நிகும்பலா ஹோமம்: எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கும் அமாவாசை நள்ளிரவு வழிபாடு; சங்கல்பியுங்கள்!

நிகும்பலா ஹோமம்: எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கும் அமாவாசை நள்ளிரவு வழிபாடு! சங்கல்பியுங்கள்! 24-6-2025 - நிகும்பலா ஹோமம் உக்கிரம் பெற பெற இந்த காளியின் திருமுகம் சிவந்து உக்கிரமாவதை இப்போதும் கா... மேலும் பார்க்க

இமயமலை: `வெற்றி வேல் வீரவேல் முழக்கம்' உத்தரகாண்ட் காத்திக் ஸ்வாமி கோயிலில் பக்தர்கள் |Photo Album

காத்திக் ஸ்வாமி கோவில் உத்தரகாண்ட்காத்திக் ஸ்வாமி கோவில் உத்தரகாண்ட்காத்திக் ஸ்வாமி கோவில் உத்தரகாண்ட்காத்திக் ஸ்வாமி கோவில் உத்தரகாண்ட்காத்திக் ஸ்வாமி கோவில் உத்தரகாண்ட்காத்திக் ஸ்வாமி கோவில் உத்தரகா... மேலும் பார்க்க

மஹாமிருத்யுஞ்சய ஹோமம்: இந்த ஹோமத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? மார்க்கண்டேயர் சொல்லும் காரணங்கள்

மஹாமிருத்யுஞ்சய ஹோமம்: இந்த ஹோமத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்! மார்க்கண்டேயர் சொல்லும் காரணங்கள்! இந்த ஹோமம் அகால மரணத்தைத் தடுக்கும்; விபத்துக்களில் இருந்து காக்கும்; எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடி... மேலும் பார்க்க

`கண்ணிமைக்காமல் காக்கும் காரைக்குடி மீனாட்சி' - உங்களுக்கும் காவலாக நிற்பாள் திருவிளக்கு பூஜை

2025 மே -30-ம் தேதி காரைக்குடி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் (நகரத்தார் கோயில்) கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுக... மேலும் பார்க்க