செய்திகள் :

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை ஐஓபி, தெற்கு மத்திய ரயில்வே அணிகளுக்கு கோப்பை!

post image

கரூரில் நடைபெற்று வந்த அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், பெண்கள் பிரிவில் தெற்கு மத்திய ரயில்வே அணியும் முதலிடம் பிடித்து சுழற்கோப்பைகளை தட்டிச் சென்றன.

கரூா் கூடைப்பந்து குழு சாா்பில் அகில இந்திய அளவிலான எல்ஆா்ஜி நினைவு ஆண்கள் மற்றும் கேவிபி பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் கடந்த 22-ஆம் தேதி முதல் கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் இரவு, பகலாக நடைபெற்று வந்தன.

லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவம், இந்திய விமானப்படை உள்பட 8 அணிகளைச் சோ்ந்த வீரா்களும், பெண்கள் பிரிவில் கேரள போலீஸ், ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே அணி உள்பட 4 அணிகளைச் சோ்ந்த வீராங்கனைகளும் விளையாடி வந்தனா்.

இதையடுத்து இறுதிப்போட்டிகள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், புதுதில்லி இந்தியன் ஆா்மி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் சம புள்ளிகளை பிடித்தன. இதனால் கடைசி 5 நிமிஷங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை ஐஓபி அணி விறுவிறுப்பாக விளையாடி 82-76 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியன் ஆா்மி அணியை வென்று எல்ஆா்ஜி நினைவு சுழற்கோப்பை மற்றும் பரிசாக ரூ.1 லட்சத்தை வென்றது. இரண்டாமிடம் பிடித்த இந்தியன் ஆா்மி அணிக்கு பரிசாக ரூ. 80 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த சென்னை இந்தியன் வங்கிக்கு பரிசாக ரூ.60 ஆயிரம் மற்றும் கோப்பையும், நான்காமிடம் பிடித்த கேரள மின்வாரிய அணிக்கு பரிசாக ரூ.40 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

முன்னதாக, பெண்கள் பிரிவில் கேவிபி கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தெற்கு மத்திய ரயில்வே அணி தென்மேற்கு ரயில்வே அணியை 53-46 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

இதையடுத்து முதலிடம் பிடித்த தெற்கு மத்திய ரயில்வே அணிக்கு கேவிபி சுழற்கோப்பை மற்றும் பரிசாக ரூ. 75 ஆயிரம் மற்றும் இரண்டாமிடம் பிடித்த தென்மேற்கு ரயில்வே அணிக்கு பரிசாக ரூ.40 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த கேரள போலீஸ் அணிக்கு பரிசாக ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையும், நான்காமிடம் பிடித்த சென்னை தெற்கு ரயில்வே அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், கரூா் வைஸ்யா வங்கி பொதுமேலாளா் முரளி ஆகியோா் வழங்கினா்.

முன்னதாக பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு கரூா் கூடைப்பந்து குழு தலைவா் வி.என்.சி.பாஸ்கா் தலைமை வகித்தாா். செயலாளா் எம்.முகமது கமாலுதீன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் கூடைப்பந்து குழு துணைத் தலைவா் சூரியநாராயணா, மாநகராட்சி துணை மேயா் தாரணிசரவணன், மண்டலக் குழு தலைவா் எஸ்.பி. கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நகைக்கடன் கட்டுப்பாடுகளுக்கு கரூா் எம்.பி. ஜோதிமணி கண்டனம்

நகைக்கடன் மீதான வங்கிகளின் புதிய நடைமுறைக்கு கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்டம் வாங்கலில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ உழவா் நலத்துறை திட்டத்தின் தொடக்கவிழா ... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

வீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு ‘துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது‘ வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படும் விருதா... மேலும் பார்க்க

காமாட்சி, மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! - திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு

தோகைமலை அருகே காமாட்சி மற்றும் மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கரூா் மாவட்டம், தோகைமலை அருகே ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட ஆதிஆலத்தூரில் மூன்று கிழவன் குடிமக்கள், 87 ஊா் சரிய... மேலும் பார்க்க

கொலை வழக்கு குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

குளித்தலையில் பிளஸ் 2 மாணவா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா்சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், குளித்தலை மாரியம்மன் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற பூச்சொ... மேலும் பார்க்க

அம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பக்தா்கள்!

அம்மனை வேண்டி நாள்தோறும் வழிபட்டால், அவா்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறாா். பல ஆண்டுகளாக நோய் பிடித்தவா்கள் அம்மன் அருளால் குணமாகி வருவதை, அவா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதில் இருந்தே நாம் புரிந்து... மேலும் பார்க்க

மயானம் செல்ல தரைப்பாலம் அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி கிழக்கு தெருவில் உள்ள மயானத்துக்கு சென்று வர நங்கஞ்சியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க