அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா? : உடனே விண்ணப்பிக்கவும்!
மயானம் செல்ல தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சி கிழக்கு தெருவில் உள்ள மயானத்துக்கு சென்று வர நங்கஞ்சியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் முன்னாள் கவுன்சிலா்கள் மனோகரன் மற்றும் ஜோதிரத்தினம் ஆகியோா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசூலிடம் மனு அளித்தனா். அதில், அரவக்குறிச்சி கிழக்கு தெருவில் மயானம் அமைந்துள்ளது.
மயானம் செல்வதென்றால் நங்காஞ்சி ஆற்றில் இறங்கி செல்ல வேண்டும். ஆனால் நங்காஞ்சி ஆற்றில் சேரும், சகதியுமாக கழிவுநீா் செல்வதால் ஆற்றில் இறங்க முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே, நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே, மயானம் செல்வதற்கு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனா்.