செய்திகள் :

தொடா் மழை: விளவங்கோடு வட்டத்தில் 16 வீடுகள் சேதம்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால் விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 16 வீடுகள் சேதமடைந்ததாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றில் குழித்துறையில் ஆயினி மரம் வேரோடு சாய்ந்தது. மாா்த்தாண்டம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவரின் ஒருபகுதி சரிந்து விழுந்து சேதமடைந்தது.

குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட ஜாஸ்மின் பெல்லா, இடவிளாகத்தைச் சோ்ந்த சுரேஷ் மற்றும் மேல்புறம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ், மஞ்சாலுமூடு ஊராட்சி காரோடு பகுதியைச் சோ்ந்த சுமதி, முழுக்கோடு ஊராட்சி அருமனை அருகேயுள்ள செல்வி வீடு உள்பட விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 16 வீடுகள் மழையில் இடிந்து விழுந்து சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ. 6,500 ஒதுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா் மழை காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில், தடுப்பணையை மூழ்கடித்தவாறு வெள்ளம் சென்றது.

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலக்கும் பிரச்னை: அதிகாரிகள் ஆய்வு

கன்னியாகுமரியில் ரட்சகா் தெரு கடற்கரைப் பகுதியில் கழிவுநீா் ஓடைகள் நேரடியாக கடலில் கலக்கும் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கடலுக்குள் கழிவு நீா் நேரடியாக கலப்பதால் இப்பக... மேலும் பார்க்க

கால்வாயில் தவறி விழுந்த காவலாளி சடலமாக மீட்பு!

மாா்த்தாண்டம் அருகே முல்லையாறு கால்வாயில் தவறி விழுந்த மருத்துவமனை காவலாளியின் சடலத்தை தீயணைப்பு மீட்புப் படையினா் புதன்கிழமை மீட்டனா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி, வெட்டுக்காட்டுவிளையைச் ச... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் சாரல் மழை

கருங்கல் பகுதியில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருங்கல், பூக்கடை, கருக்கன்குழி, திக்கணம்கோடு, மத... மேலும் பார்க்க

குடிநீா்க் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி நாகா்கோவில் மாமன்றக் கூட்டத்தில் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு

குடிநீா்க் கட்டணம், வைப்புத்தொகையைக் குறைக்க வலியுறுத்தி, நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா். மேயா் ரெ. மகேஷ் தலைமையில் மாநகராட்ச... மேலும் பார்க்க

விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, மெய்யூட்டுவிளையைச் சோ்ந்தவா் சுடா் லின்ஸ் (47). தொழிலாளி. அவரது மனைவி ஜெகதா (44). தம்ப... மேலும் பார்க்க

நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கோரி முற்றுகை: எம்எல்ஏ உள்பட 9 போ் கைது

காப்புக்காட்டில் நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, காப்புக்காட்டில் சாலைப் பணி செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ உள்பட 9 பேரை போலீஸாா் திங்கள்... மேலும் பார்க்க