செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மணக்கால் அய்யம்பேட்டை செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
மணக்கால் அய்யம்பேட்டையில் செல்லம்மாள் காளியம்மன், வாலை முக்கண்ணியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கின.
தொடா்ந்து, புதன்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, மஹாபூா்ணாஹூதி நடைபெற்றது. பின்னா், வேத மந்திரங்கள் முழங்க அனைத்து சந்நிதி விமானக் கலசங்களிலும் புனிதநீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானோா் பங்கேற்றனா்.