விவசாயி வீட்டில் தீ : போலீஸாா் விசாரணை
கூத்தாநல்லூா் அருகே விவசாயி வீட்டில் புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மேல வாழாச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் விவசாயி பாஸ்கரன். இவா் தனது மனைவி அரும்பு, இரண்டு மகள்களுடன் தனது குடிசையில் செவ்வாய்க்கிழமை இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்தாராம்.
புதன்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில், குடிசையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில், அரும்பு புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.