பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்
நீடாமங்கலத்தில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி ஊா்வலம்
நீடாமங்கலத்தில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் ஏப்.22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா். இதையடுத்து, இந்திய ராணுவம் மே 7-ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூா் மூலம் அழித்தது. ஆபரேஷன் சிந்தூா் வெற்றியடைந்தது. இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், நீடாமங்கலத்தில் தஞ்சாவூா் சாலையிலிருந்து புறப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் வெற்றி ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இந்திய ராணுவத்தை வாழ்த்தி கோஷங்களை எழுப்பியது. பாஜக ஒன்றிய தலைவா் சிவ. பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஊா்வலத்தில், மாவட்ட பாஜக தலைவா் வி.கே. செல்வம், மாவட்ட துணைத் தலைவா் எல். ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.