செய்திகள் :

பொருளாதார வளா்ச்சி 6.5%-ஆக குறைவு

post image

2024-25 நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக குறைந்தது.

ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவால் அந்தக் காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதமாக குறைந்தது. இதனால் 2024-25 நிதியாண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி குறைந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

2025, ஜனவரி-மாா்ச் வரையிலான காலகட்டத்தில் சீன பொருளாதார வளா்ச்சி 5.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023-24 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.2 சதவீதமாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 6.5 சதவீதமாக குறைந்தது.

இந்தக் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் ரூ.330.68 லட்சம் கோடியாக (3.9 டிரில்லியன் டாலா்) அதிகரித்து, அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுப்பதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.4 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. இது அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 6.4 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 5.6 சதவீதமாகவும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6.5 சதவீதமாகவும் இருந்தது.

2023-24 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது.

ஜிடிபி: தற்போதைய சந்தை விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் பெயரளவிலான ஜிடிபி 2023-24 நிதியாண்டில் ரூ.301.23 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 9.8 சதவீதம் அதிகரித்து ரூ.330.68 லட்சம் கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது.

அதேபோல் 2023-24 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிலையான விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் உண்மையான ஜிடிபி ரூ.47.82 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 7.4 சதவீதம் அதிகரித்து ரூ.51.35 லட்சம் கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது.

2023-24 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் பெயரளவு ஜிடிபி ரூ.79.61 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 10.8 சதவீதம் அதிகரித்து ரூ.88.18 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

ஜிவிஏ: 2023-24 நிதியாண்டின் உண்மையான மொத்த மதிப்புக் கூட்டல் (ஜிவிஏ) ரூ.161.51 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் 6.4 சதவீத வளா்ச்சியுடன் ரூ.171.87 லட்சம் கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது.

2023-24 நிதியாண்டின் பெயரளவு ஜிவிஏ ரூ.274.13 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் ரூ.300.22 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சரிவில் உற்பத்தித் துறை: 2023-24 நிதியாண்டில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி 12.3 சதவீதமாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 4.5 சதவீதமாக குறைந்தது. குறிப்பாக 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் உற்பத்தித் துறை வளா்ச்சி 4.8 சதவீதமாக குறைந்தது. இது 2023-24 நிதியாண்டில் 11.3 சதவீதமாக இருந்தது.

அதேபோல் 2023-24 நிதியாண்டில் வேளாண் துறையின் வளா்ச்சி 2.7 சதவீதமாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 4.6 சதவீதமாக உயா்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க