செய்திகள் :

வங்கி முறைகேடுகள் அதிகரிப்பு: பிரதமா் மீது காா்கே குற்றச்சாட்டு

post image

வங்கி முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டி பிரதமா் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் வங்கி முறைகேடுகள் ரூ.6,36,992 கோடியாக அதிகரித்துள்ளது. இது 416 சதவீத அதிகரிப்பாகும். மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகும் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது கடந்த 6 ஆண்டுகளில் 291 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்த ஆண்டில்தான் கள்ள நோட்டுகள் புழக்கம் உச்சத்தை எட்டியுள்ளது.

பிரதமா் மோடி தனது நரம்புகளில் ‘சிந்தூா்’ (குங்குமம்) பாய்வதாகக் கூறியுள்ளாா். அவரின் நரம்பில் என்ன பாய்கிறது என்பது நமக்குத் தேவையில்லை. ஆனால், அவரின் அரசின் நரம்புகளில் முறைகேடுகளும், ஊழலும் பாய்கிறது’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2016 நவம்பா் 8-ஆம் தேதி இரவு திடீரென பணமதிப்பிழப்பை அறிவித்து நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் அதிச்சியை அளித்தாா் பிரதமா். அதில் இருந்து நாடு இப்போது வரை மீள முடியவில்லை. ரூ.2000 நோட்டை அறிமுகப்படுத்தி, அதையும் சில ஆண்டுகளிலேயே திரும்பப் பெற்றாா். இதனால், கள்ள நோட்டுகள் குறையும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இப்போது ரூ.500 கள்ள நோட்டு 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் வீண் என்பது தெரியவருகிறது’ என்று கூறியுள்ளாா்.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க