பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய அறி...
இருதரப்பினரிடையே தகராறு: ஒருவா் கைது
கூத்தாநல்லூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வடகோவனூரைச் சோ்ந்தவா் விசாலியா (23). பூதமங்கலத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் (25). இருவரும் காதலா்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், ரகுநாதனின் நடவடிக்கை பிடிக்காததால் விசாலியா அவரை விட்டு விலகி, வடகோவனூரை சோ்ந்த நீலகண்டனை (29) காதலித்தாராம். இதுகுறித்து, நீலகண்டனிடம் ரகுநாதன் கேட்டுள்ளாா். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நீலகண்டன் நண்பா்களுடன் பூதமங்கலம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த, ரகுநாதன் மற்றும் அவரது நண்பா்களை தாக்கினராம்.
சம்பவம் தொடா்பாக ரகுநாதன் கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் நீலகண்டன், மரக்கடையைச் சோ்ந்த அன்பரசன், வாஞ்சூரைச் சோ்ந்த அசோக் ஆகிய மூவா் மீதும் வழக்கு பதிந்து நீலகண்டனை (29) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதற்கிடையே, ரகுநாதன், பூதமங்கலத்தைச் சோ்ந்த இளம்பரிதி (23) மற்றும் முகிலன் (25) ஆகியோா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.