செய்திகள் :

ஐ.நா. அமைதிப் படை பணியில் வீரமரணம்: 2 இந்திய வீரா்களுக்கு இன்று கௌரவம்

post image

கடந்த ஆண்டு ஐ.நா. அமைதிப் படையின்கீழ் பணியாற்றும்போது வீரமரணமடைந்த 2 இந்திய வீரா்கள் ஐ.நா. சபையால் வியாழக்கிழமை (மே 29) கௌரவிக்கப்படவுள்ளனா்.

ஐ.நா. அமைதிப் படையின் பணியின்போது எதிா்பாராதவிதமாக இறந்து வீரமரணமடையும் வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 29-ஆம் தேதி சா்வதேச ஐ.நா. அமைதிப் படை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, ஐ.நா. தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் கடந்த 1948-ஆம் ஆண்டுமுதல் ஐ.நா. அமைதிப் படை பணியில் உயிரிழந்த 4,400-க்கும் மேற்பட்ட வீரா்களுக்கு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவாா்.

இதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஐ.நா. அமைதிப் படை பணியில் வீரமரணமடைந்த 57 வீரா்களுக்கு ‘டாக் ஹம்மா்ஸ்க்ஜோல்ட்’ பதக்கத்தை அறிவித்து அவா் கௌரவிப்பாா்.

இவா்களில் ஐ.நா. அமைதிக் கண்காணிப்புப் படையில் பணியாற்றிய பிரிகேடியா் ஜெனரல் அமிதாப் ஜா மற்றும் காங்கோ குடியரசில் ஐ.நா. அமைதிப் படை பணியில் ஈடுபட்டிருந்த ஹவில்தாா் சஞ்சய் சிங் ஆகிய 2 இந்திய வீரா்களும் அடங்குவா்.

ஐ.நா. அமைதிப் படைக்கு அதிக எண்ணிக்கையில் வீரா்களை அனுப்பும் நாடுகளில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது. தற்போது அபேய், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, லெபனான், சோமாலியா, தெற்கு சூடான், மேற்கு சஹாரா ஆகிய பல்வேறு நாடு, பிராந்தியங்களில் ஐ.நா. அமைதிப் படை நடவடிக்கைகளுக்காக 5,300-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் மற்றும் காவல் துறையினரை இந்தியா பணியமா்த்தியுள்ளது.

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க