அரசு நிலம் ஆக்கிரமிப்பு: முஸ்லிம் வழிபாட்டு தலம் அகற்றம்
நஜாஃப்கா் வடிகால் அருகே உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் மதவழிபாட்டு தலத்தை (மஜாா்) அதிகாரிகள் அகற்றியதாக தில்லி அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
இது தொடா்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது: ரங்கோலா கிராமத்தில் உள்ள நஜாஃப்கா் வடிகால் அருகே உள்ள அரசு நிலத்தின் 192 சதுர கி.மீ. பரப்பை ஆக்கிரமித்து முஸ்லிம் வழிபாட்டுத்தலம் கட்டப்படிருந்ததது. கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிமிக்கப்பட்டிருந்த அந்தக் வழிபாட்டுத் தலம் இடிக்கப்பட்டு, தற்போது உரிமை கோரப்பட்டுள்ளது.
உரிய திட்டமிடல் மற்றும் அமைப்பு ரீதியாக போதிய பணியாளா்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்த அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இது போன்ற பல மதவழிபாட்டு தலங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.