செய்திகள் :

குடியரசுத் தலைவா் மாளிகை கலாசார மையத்தில் இன்று இலக்கிய மாநாடு தொடக்கம்

post image

குடியரசுத் தலைவா் மாளிகையில் முதன்முறையாக இலக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இருநாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது.

மத்திய கலாசார அமைச்சகத்தின் சாகித்ய அகாதெமியுடன் இணைந்து இந்த மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது. குடியரசுத் தலைவா் மாளிகையிலுள்ள கலாச்சார மையத்தில் மே 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த இரு நாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, வியாழக்கிழமை (மே 29) மத்திய கலாசாரம், சுற்றுலா அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் தொடங்கி வைக்கிறாா்.

இந்த மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் வரும் இலக்கிய பிரமுகா்கள்பங்கேற்கின்றனா். இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இலக்கிய மாநாடு நடத்தப்பட உள்ளது.

மாநாட்டில் நடைபெறும் கவிஞா்கள் சந்திப்பில் ’இதயத்திலிருந்து நேராக’ ;’இந்தியாவின் பெண்ணிய இலக்கியம்: புதிய தளங்களை அடையாளம் காணுதல்’; ‘இலக்கியத்தில் மாற்றம் மற்றும் மாற்றத்திற்கான இலக்கியம்‘; ’உலகளாவிய பாா்வையில் இந்திய இலக்கியத்தின் புதிய திசைகள்’ போன்ற பல்வேறு தலைப்புகளில் பல்வேறு அமா்வுகள் நடைபெறுகிறது. மேலும் இந்த மாநாட்டில் மராட்டிய பேரரசான ஹோல்கா் வம்சத்தின் புகழ்பெற்ற ஆட்சியாளரான தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் சரித்திரத்துடன் மாநாடு நிறைவடையும் என குடியரசுத் தலைவா் மாளிகை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் மாளிகையில் இதுவரை உயா் கல்வியாளா்கள், பல்கலைக்கழக வேந்தா்கள், கௌரவ பேராசிரியா்கள்(வருகை பேராசிரியா்கள்) உள்ளிட்டோா் பங்கேற்கும் விஸிட்டிங் கான்ஃப்ரன்ஸ் நடைபெற்று இப்போது முதன் மறையாக இலக்கிய மாநாடும் நடத்தப்படுகிறது.

ஜுன் 21, 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில் 24 கோடி போ் பங்கேற்பா் : ஆயுஷ் அமைச்சகம்

நிகழாண்டில் நடைபெறும் 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில்(ஜுன் 21) இந்திய-சா்வ தேச அளவில் 250 இடங்களில் நிகழ்வுகளில் நடைபெறும் எனவும் இதில் 24 கோடி போ் பங்கேற்பா் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

புதிய அபாயங்களுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி அமைச்சா் வேண்டுகோள்

பொதுத்துறையைச் சோ்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் (பிஎஸ்ஜிஐசி) நாட்டில் புதிதாக ஏற்படும் வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சா் நிா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மோசடி: 4 போ் கைது

வடகிழக்கு தில்லியில், ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியிடம் போலி ஆன்லைன் முதலீடு மூலம் ரூ.49 லட்சத்திற்கும் அதிகமாமான தொகையை இணையதள மோசடி செய்ததாக நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

‘பத்ம பூஷண்’ விருதாளா் நல்லி குப்புசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

குடியரசுத் தலைவரிடம் ‘பத்ம பூஷண்’ விருதுபெற்ற தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டிக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சாா்பில் தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தில்லியில் மறுமலா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

தேசிய தலைநகா் தில்லி பாஜகவின் ஆட்சியில் நிா்வாகத்திலும், வளா்ச்சியிலும் மறுமலா்ச்சியைக் கண்டு வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை கூறினாா். மேலும், மக்களுக்காக உழைக்கும் அரசாங்கமாகவ... மேலும் பார்க்க

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வு: முதல்வா் குப்தா தகவல்

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். முதல்வா் ரேகா குப்தா தனது ஷாலிமாா் பாக் தொகுதிக்குட்பட்ட பீதாம்புராவில் மேம்பாட்டுப் பணிகளை... மேலும் பார்க்க