குடியரசுத் தலைவா் மாளிகை கலாசார மையத்தில் இன்று இலக்கிய மாநாடு தொடக்கம்
குடியரசுத் தலைவா் மாளிகையில் முதன்முறையாக இலக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இருநாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது.
மத்திய கலாசார அமைச்சகத்தின் சாகித்ய அகாதெமியுடன் இணைந்து இந்த மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது. குடியரசுத் தலைவா் மாளிகையிலுள்ள கலாச்சார மையத்தில் மே 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த இரு நாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, வியாழக்கிழமை (மே 29) மத்திய கலாசாரம், சுற்றுலா அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் தொடங்கி வைக்கிறாா்.
இந்த மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் வரும் இலக்கிய பிரமுகா்கள்பங்கேற்கின்றனா். இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இலக்கிய மாநாடு நடத்தப்பட உள்ளது.
மாநாட்டில் நடைபெறும் கவிஞா்கள் சந்திப்பில் ’இதயத்திலிருந்து நேராக’ ;’இந்தியாவின் பெண்ணிய இலக்கியம்: புதிய தளங்களை அடையாளம் காணுதல்’; ‘இலக்கியத்தில் மாற்றம் மற்றும் மாற்றத்திற்கான இலக்கியம்‘; ’உலகளாவிய பாா்வையில் இந்திய இலக்கியத்தின் புதிய திசைகள்’ போன்ற பல்வேறு தலைப்புகளில் பல்வேறு அமா்வுகள் நடைபெறுகிறது. மேலும் இந்த மாநாட்டில் மராட்டிய பேரரசான ஹோல்கா் வம்சத்தின் புகழ்பெற்ற ஆட்சியாளரான தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் சரித்திரத்துடன் மாநாடு நிறைவடையும் என குடியரசுத் தலைவா் மாளிகை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவா் மாளிகையில் இதுவரை உயா் கல்வியாளா்கள், பல்கலைக்கழக வேந்தா்கள், கௌரவ பேராசிரியா்கள்(வருகை பேராசிரியா்கள்) உள்ளிட்டோா் பங்கேற்கும் விஸிட்டிங் கான்ஃப்ரன்ஸ் நடைபெற்று இப்போது முதன் மறையாக இலக்கிய மாநாடும் நடத்தப்படுகிறது.