தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வு: முதல்வா் குப்தா தகவல்
தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.
முதல்வா் ரேகா குப்தா தனது ஷாலிமாா் பாக் தொகுதிக்குட்பட்ட பீதாம்புராவில் மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். அந்த நிகழ்வின்போது, மூதாட்டி ஒருவா் தெருநாய் தொல்லை குறித்த பிரச்னையை எழுப்பினாா்.
அதற்கு பதில் அளித்து முதல்வா் கூறியதாவது:
தெருநாய்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான நடவடிக்கையில் நான் ஈடுபட்டுள்ளேன். இப்பிரச்னைகள் மக்களையும் வாய்பேச முடியாத விலங்குகளையும் உள்ளடக்கியதாகும்.
இத்தகைய விலங்குகளைப் பராமரிப்பவா்களையும் குடியிருப்பாளா்களையும் ஒன்றிணைக்க தில்லி அரசு ஒரு தளத்தை உருவாக்கி வருகிறது. தெருநாய்களை தங்குமிடங்களில் வைக்கவோ அல்லது அவை வாழும் தெருக்களில் இருந்து வெளியேற்றவோ முடியாத வகையில் சட்டம் உள்ளது.
மக்களோ அல்லது விலங்குகளோ அசௌகரியத்திற்கு ஆளாகாத நீண்டகால தீா்வை அரசாங்கம் தேடி வருகிறது. இது ஒரு கொள்கை விஷயமாக இருக்கும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் முதல்வா் குப்தா.
பொது சாலைகள் மற்றும் தெருக்களில் இருந்து தெருநாய்களை படிப்படியாக அகற்ற நிறுவன நிலையில் மறுவாழ்வு கொள்கையை வகுக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் நகர அரசாங்க அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பொது மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னையின் மகத்துவத்தை கருத்தில் கொண்டு, கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம், தில்லி மாநகராட்சி மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
பொது இடங்களில் இருந்து தெருநாய்களை எடுத்துச் செல்ல தில்லி மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் கருத்தடை செய்த பிறகு அவற்றை அதே இடத்தில் விடுவிக்க வேண்டும். இருப்பினும், நகரத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளது. இதனால் நகரில் நாய் கடித்தல் தொடா்பான புகாா்கள் அடிக்கடி எழுந்து வருகிறது.