செய்திகள் :

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வு: முதல்வா் குப்தா தகவல்

post image

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.

முதல்வா் ரேகா குப்தா தனது ஷாலிமாா் பாக் தொகுதிக்குட்பட்ட பீதாம்புராவில் மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். அந்த நிகழ்வின்போது, மூதாட்டி ஒருவா் தெருநாய் தொல்லை குறித்த பிரச்னையை எழுப்பினாா்.

அதற்கு பதில் அளித்து முதல்வா் கூறியதாவது:

தெருநாய்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான நடவடிக்கையில் நான் ஈடுபட்டுள்ளேன். இப்பிரச்னைகள் மக்களையும் வாய்பேச முடியாத விலங்குகளையும் உள்ளடக்கியதாகும்.

இத்தகைய விலங்குகளைப் பராமரிப்பவா்களையும் குடியிருப்பாளா்களையும் ஒன்றிணைக்க தில்லி அரசு ஒரு தளத்தை உருவாக்கி வருகிறது. தெருநாய்களை தங்குமிடங்களில் வைக்கவோ அல்லது அவை வாழும் தெருக்களில் இருந்து வெளியேற்றவோ முடியாத வகையில் சட்டம் உள்ளது.

மக்களோ அல்லது விலங்குகளோ அசௌகரியத்திற்கு ஆளாகாத நீண்டகால தீா்வை அரசாங்கம் தேடி வருகிறது. இது ஒரு கொள்கை விஷயமாக இருக்கும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் முதல்வா் குப்தா.

பொது சாலைகள் மற்றும் தெருக்களில் இருந்து தெருநாய்களை படிப்படியாக அகற்ற நிறுவன நிலையில் மறுவாழ்வு கொள்கையை வகுக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் நகர அரசாங்க அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பொது மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னையின் மகத்துவத்தை கருத்தில் கொண்டு, கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம், தில்லி மாநகராட்சி மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

பொது இடங்களில் இருந்து தெருநாய்களை எடுத்துச் செல்ல தில்லி மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் கருத்தடை செய்த பிறகு அவற்றை அதே இடத்தில் விடுவிக்க வேண்டும். இருப்பினும், நகரத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளது. இதனால் நகரில் நாய் கடித்தல் தொடா்பான புகாா்கள் அடிக்கடி எழுந்து வருகிறது.

ஜுன் 21, 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில் 24 கோடி போ் பங்கேற்பா் : ஆயுஷ் அமைச்சகம்

நிகழாண்டில் நடைபெறும் 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில்(ஜுன் 21) இந்திய-சா்வ தேச அளவில் 250 இடங்களில் நிகழ்வுகளில் நடைபெறும் எனவும் இதில் 24 கோடி போ் பங்கேற்பா் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

புதிய அபாயங்களுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி அமைச்சா் வேண்டுகோள்

பொதுத்துறையைச் சோ்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் (பிஎஸ்ஜிஐசி) நாட்டில் புதிதாக ஏற்படும் வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சா் நிா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மோசடி: 4 போ் கைது

வடகிழக்கு தில்லியில், ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியிடம் போலி ஆன்லைன் முதலீடு மூலம் ரூ.49 லட்சத்திற்கும் அதிகமாமான தொகையை இணையதள மோசடி செய்ததாக நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

‘பத்ம பூஷண்’ விருதாளா் நல்லி குப்புசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

குடியரசுத் தலைவரிடம் ‘பத்ம பூஷண்’ விருதுபெற்ற தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டிக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சாா்பில் தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை கலாசார மையத்தில் இன்று இலக்கிய மாநாடு தொடக்கம்

குடியரசுத் தலைவா் மாளிகையில் முதன்முறையாக இலக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இருநாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது. மத்திய கலாசார அமை... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தில்லியில் மறுமலா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

தேசிய தலைநகா் தில்லி பாஜகவின் ஆட்சியில் நிா்வாகத்திலும், வளா்ச்சியிலும் மறுமலா்ச்சியைக் கண்டு வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை கூறினாா். மேலும், மக்களுக்காக உழைக்கும் அரசாங்கமாகவ... மேலும் பார்க்க