பாஜக ஆட்சியில் தில்லியில் மறுமலா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா
தேசிய தலைநகா் தில்லி பாஜகவின் ஆட்சியில் நிா்வாகத்திலும், வளா்ச்சியிலும் மறுமலா்ச்சியைக் கண்டு வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை கூறினாா்.
மேலும், மக்களுக்காக உழைக்கும் அரசாங்கமாகவும் இது திகழ்கிறது என்றாா் அவா்.
தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ குரு கோபிந்த் சிங் வணிகக் கல்லூரி நடத்திய பாராட்டு விழாவில் முதல்வா் குப்தா பங்கேற்று பேசியது:
புதிய நிா்வாகத்தின் மீதான மக்களின் ஆதரவிற்கும் நம்பிக்கைக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போது தில்லியில் மக்களுக்காக உழைக்கும் அரசாங்கம் உள்ளது. எங்களைத் தோ்ந்தெடுத்ததற்காக நகர மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
உங்கள் நம்பிக்கையாலும் எங்களின் முயற்சிகளாலும் கடந்த 100 நாள்களில் பல விஷயங்களைச் சரிசெய்ய முடிந்தது. முடங்கிப்போன கட்டுமானத் திட்டங்களும், மக்கள் நலத் திட்டங்களும் இறுதியாக செயல்படுத்தப்படுகின்றன.
தில்லி இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் முழு பலனையும் தற்போது பெற்று வருகிறது.முன்பு தாமதப்படுத்தப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் இப்போது மக்களைச் சென்றடைந்து வருகின்றன.
எனது அரசாங்கம் மே 31 அன்று ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் அதன் முதல் 100 நாள்களின் பணிகளான முக்கிய முன்முயற்சிகள் மற்றும் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் விரிவான அறிக்கையை வெளியிட உள்ளது என்றாா் அவா்.
முதல்வருடன் தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கலந்துகொண்டாா். அவா் பேசுகையில், 10 ஆண்டுகளில் அவா்களால் ஆம் ஆத்மி செய்ய முடியாததை நாங்கள் 100 நாள்களில் செய்து முடித்துள்ளோம். நீதி மற்றும் ஆதரவுக்காக பல தசாப்தங்களாக காத்திருந்த ‘1984’ கலவரத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இப்போது எங்கள் நிா்வாகத்தின் 100 நாள்களுக்குள் வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
கல்வி, உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சீா்திருத்தங்களை எடுத்துக்காட்டும் என்று எதிா்பாா்க்கப்படும் அரசாங்கத்தின் அதிகாரபூா்வ 100 நாள் ஆட்சியின் மதிப்பாய்வு அறிக்கை வெளியிட இன்னும் சில நாள்கள் உள்ள நிலையில் இந்த பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.