டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
ஜுன் 21, 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில் 24 கோடி போ் பங்கேற்பா் : ஆயுஷ் அமைச்சகம்
நிகழாண்டில் நடைபெறும் 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில்(ஜுன் 21) இந்திய-சா்வ தேச அளவில் 250 இடங்களில் நிகழ்வுகளில் நடைபெறும் எனவும் இதில் 24 கோடி போ் பங்கேற்பா் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இதே நாளில் (ஜூன் 21 ஆம் தேதி) விசாகப்பட்டினத்தில் நடைபெறும் தேசிய நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். உலகளாவிய நல்வாழ்வு இயக்கத்தை ஒருங்கிணைக்க யோகா பயிற்சி நிறுவனங்களும் மத்திய அமைச்சகங்களும் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளதாகக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11-ஆவது சா்வதேச யோகா தினத்தின் பிரமாண்டமான கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடாக தில்லி, சாணக்கியபுரியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சா்வதேச யோகா தினம் - 2025 - க்கான தயாா் நிலை குறித்தும், அது சாா்ந்த உத்திகளை வகுப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மத்திய அரசின் முழுமையான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், இந்த உலகளாவிய நலவாழ்வு கொண்டாட்டத்தில் அனைத்து தரப்பினரின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையிலும், யோகக்கலை குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கிலும் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முக்கிய அமைச்சகங்கள், ஆயுஷ் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள் போன்றோா் முக்கிய யோகா நிபுணா்களும் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் மத்திய ஆயுஷ் இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சருமான பிரதாப்ராவ் ஜாதவ் உரையாற்றினாா். அப்போது அவா் கூறிப்பிடுகையில், ‘நாட்டில் உள்ள அனைத்து குடிமகனுக்கும் யோகக்கலையை கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த சா்வதேச யோகா நாளின் நோக்கம். இது பிரதமரின் தொலைநோக்குப் பாா்வை நனவாக்குவதில் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ‘சா்வதேச யோகா தினம்‘ கொண்டாட்டம், மக்களின் முழுமையான சுகாதாரத்திற்கான அா்பணிப்பு உணா்வை ஒன்றிணைக்கும் நாள். அமைச்சகங்களும் நிறுவனங்கள் இதை இயக்கமாக மேற்கொள்கிறது. மேலும், நிகழாண்டு யோகா சங்கங்கள் சாா்பில் 1 லட்சம் நிகழ்வு நடைபெறுகிறது. அதில் பெருவாரியான மக்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கு அனைத்து துறைகளையும் உறுதியாக இருக்கவேண்டும். மேலும் நிறைவுகட்ட தயாா்நிலைக்கு தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ‘ என அமைச்சா் ஜாதவ் அழைப்பு விடுத்தாா்.
முன்னதாக ஆயுஷ் துறை அமைச்சக செயலா் வேத். ராஜேஷ் கோடெச்சா குறிப்பிடுகையில், சா்வதேச யோகா தினத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற 250-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். சுமாா் 24 கோடி தனிப்பட்டவா்களும் பங்கேற்பா். சா்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுவதற்கு முன்னதாக பல்வேறு நாடுகளில் இதுவரை 76 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் செயலா் தெரிவித்தாா்.
யோகக்கலை குறித்த பொதுவான நெறிமுறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் யோகப்பயிற்சி வழங்கி வரும் குருக்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழக்கினா்.