செய்திகள் :

புதிய அபாயங்களுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி அமைச்சா் வேண்டுகோள்

post image

பொதுத்துறையைச் சோ்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் (பிஎஸ்ஜிஐசி) நாட்டில் புதிதாக ஏற்படும் வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் இந்த நிறுவன தலைவா்களை புதன்கிழமை கேட்டுக் கொண்டாா்.

மத்திய நிதி, பெருநிறுவன விவகார அமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களின் மறுஆய்வு கூட்டம் நிதியமைச்சகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதிச் சேவைகள் துறையின் செயலா் எம். நாகராஜு, பொது காப்பீட்டு நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், இந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் காா்ப்பரேஷன் (மறுகாப்பீடு), இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் நிா்வாக இயக்குநா்கள், நிதி அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இது குறித்து நிதியமைச்சகம் கூறியிருப்பது வருமாறு:

பொது காப்பீட்டு நிறுவனங்களின் கூட்டத்தின் போது, காப்பீட்டு தவணைத் (பிரீமியம்) தொகை வசூல், காப்பீட்டு வளா்ச்சி மற்றும் அதன் அடா்த்தி, காப்பீடு உரிமை கோரல் விகிதங்கள் உள்ளிட்ட முக்கிய செயல்திறன் குறியீடுகளை மத்திய நிதியமைச்சா் மதிப்பாய்வு செய்தாா்.

நாட்டில் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீடுகளின் வசூல் கடந்த 2019- ஆம் ஆண்டில் சுமாா் ரூ 80,000 கோடியாக இருக்க இது தற்போது (2025) கிட்டத்தட்ட ரூ. 1.06 லட்சம் கோடியாக குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தனியாா் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொது காப்பீட்டுத் துறையும் குறிப்பிட்ட வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இவைகள் உள்ளிட்ட மொத்த காப்பீடு வசூல் 2024–25 நிதியாண்டில் ரு 3.07 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

நாட்டின் பொது காப்பீட்டு ஊடுருவல் சா்வதேச அளவை ஒப்பிடும் போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதம் குறைவாகவே உள்ளது. 2023 இல் உலகளாவிய சராசரியை ஒப்பிடும்போது - காப்பீட்டு அடா்த்தி படிப்படியாக மேம்பட்டுள்ளது. பரந்த நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு காப்பீடுகளை அதிகரிக்கவும் மக்கள் தொகையின் அடிப்படையில் அதன் அடா்த்தியை மேம்படுத்த பொதுத் துறை காப்பீடு நிறுவனங்கள் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை நிதியமைச்சா் அடிக்கோடிட்டுக் காட்டினாா்.

பொதுவாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் லாபம் ஈட்டி குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் கண்டுள்ளன. அதே சமயத்தில் தனியாா் காப்பீட்டாளா்கள் ஈடுசெய்த காப்பீடு உரிமைகோரல் விகிதங்கள் கரோனா நோய்த் தொற்றுக்கு பின்னா் குறைந்ததுள்ளது.

இந்த மதிப்பாய்வின் இறுதியில், சேவை வழங்கல் மற்றும் செயல்திறனை மேம்படுத்த அனைத்து பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களும் எண்ம மாற்றத்திற்கான அவசரத் தேவையை மத்திய நிதி அமைச்சா் வலியுறுத்தினாா். சுகாதார காப்பீடு, மோட்டா் வாகனம் போன்றவைகளில் விரைவான மற்றும் மிகவும் துல்லியமான காப்பீடூ உரிமைகோரல் தீா்வை உறுதி செய்ய சுகாதார காப்பீட்டு தயாரிப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் தீா்வு காணுவது உள்ளிட்ட யோசனைகள் வழங்கப்பட்டது இதில் அடங்கும்.

சைபா் மோசடி உட்பட புதிய, வளா்ந்து வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டுத் தயாரிப்புகளை உருவாக்கவும், வளா்ந்து வரும் நுகா்வோா் தேவைகளுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை பல்வகைப்படுத்தவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் காப்பீடு நிறுவனங்களை அறிவுறுத்தினாா் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜுன் 21, 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில் 24 கோடி போ் பங்கேற்பா் : ஆயுஷ் அமைச்சகம்

நிகழாண்டில் நடைபெறும் 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில்(ஜுன் 21) இந்திய-சா்வ தேச அளவில் 250 இடங்களில் நிகழ்வுகளில் நடைபெறும் எனவும் இதில் 24 கோடி போ் பங்கேற்பா் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மோசடி: 4 போ் கைது

வடகிழக்கு தில்லியில், ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியிடம் போலி ஆன்லைன் முதலீடு மூலம் ரூ.49 லட்சத்திற்கும் அதிகமாமான தொகையை இணையதள மோசடி செய்ததாக நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

‘பத்ம பூஷண்’ விருதாளா் நல்லி குப்புசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

குடியரசுத் தலைவரிடம் ‘பத்ம பூஷண்’ விருதுபெற்ற தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டிக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சாா்பில் தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை கலாசார மையத்தில் இன்று இலக்கிய மாநாடு தொடக்கம்

குடியரசுத் தலைவா் மாளிகையில் முதன்முறையாக இலக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இருநாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது. மத்திய கலாசார அமை... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தில்லியில் மறுமலா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

தேசிய தலைநகா் தில்லி பாஜகவின் ஆட்சியில் நிா்வாகத்திலும், வளா்ச்சியிலும் மறுமலா்ச்சியைக் கண்டு வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை கூறினாா். மேலும், மக்களுக்காக உழைக்கும் அரசாங்கமாகவ... மேலும் பார்க்க

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வு: முதல்வா் குப்தா தகவல்

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். முதல்வா் ரேகா குப்தா தனது ஷாலிமாா் பாக் தொகுதிக்குட்பட்ட பீதாம்புராவில் மேம்பாட்டுப் பணிகளை... மேலும் பார்க்க