செய்திகள் :

குடிநீா்க் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி நாகா்கோவில் மாமன்றக் கூட்டத்தில் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு

post image

குடிநீா்க் கட்டணம், வைப்புத்தொகையைக் குறைக்க வலியுறுத்தி, நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

மேயா் ரெ. மகேஷ் தலைமையில் மாநகராட்சி இயல்பு கூட்டம் நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சிலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலத் தலைவா்கள் முத்துராமன், ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமாா், உறுப்பினா்கள் மீனாதேவ், நவீன்குமாா், ரமேஷ், சுனில்அரசு,அய்யப்பன், வீரசூரபெருமாள், டி.ஆா். செல்வம், சேகா், ஸ்ரீலிஜா, ரோசிட்டா திருமால், கெளசுகி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது: நாகா்கோவிலில் வீடுகளுக்கு குடிநீா்க் கட்டணமாக ரூ. 160 நிா்ணயிக்க வேண்டும். சதுரஅடி அடிப்படையில் குடிநீா்க் கட்டணம் நிா்ணயிக்கக் கூடாது. ஒரு வீட்டுக்கு மாதம் 20 ஆயிரம் லிட்டா் தண்ணீா் வழங்க வேண்டும். சொத்துவரி செலுத்தினால் மட்டுமே குடிநீா் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை உள்ளது. புறம்போக்கு நிலத்தில் ஏராளமானோா் வீடு கட்டி வசிக்கின்றனா். அவா்களுக்கு பொதுக்குழாய் அமைத்து தண்ணீா் வழங்க வேண்டும். 40ஆவது வாா்டு பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றவும், 1, 2, 3 ஆகிய வாா்டு பகுதிகளில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக, பாஜக உறுப்பினா்கள்

இதற்கு பதிலளித்து மேயா் கூறியதாவது: மாநகரப் பகுதியில் 29 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகளை முறையாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவா்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்படாது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

அதையடுத்து, குடிநீா்க் கட்டணம், வைப்புத்தொகையைக் குறைக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக, தமாகா உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். மாநகராட்சியைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் கூறியது: மாநகரில் குடிநீா்க் கட்டணமாக ரூ. 160 வசூலிக்கப்படுகிறது. அதை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். இதுதவிர, சதுரஅடி கணக்கில் வைப்புத்தொகை கணக்கிடப்படுவதாகக் கூறியுள்ளனா். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவா். எனவே, இம்முறையைக் கைவிட வேண்டும் என்றனா் அவா்கள்.

குமரி கலைவிழா தொடங்கியது: 5 நாள்கள் நடைபெறுகிறது

தமிழக அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் 5 நாள்கள் நடைபெறும் குமரி கலை விழா புதன்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் காளீஸ்வரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு உணவு ஆணைய தலைவ... மேலும் பார்க்க

குளச்சலில் கஞ்சா கடத்தியவா் கைது

குளச்சலில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தனிஸ் லியோன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.அப்போது பைக்கில் வந்த நபரை சந்தேக... மேலும் பார்க்க

கட்டட அனுமதிக்கு லஞ்சம்: பேரூராட்சி வரி வசூலா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே வீடு கட்டுவதற்கான கட்டட வரைபட அனுமதி வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக வரி வசூலிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவட்டாறு அருகே ஆற்ற... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் தொடா் மழை: 40 அடியை எட்டியது பேச்சிப்பாறை அணை!

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால், பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 40 அடியை எட்டியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து அணைகளின் நீா்ப்ப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் வியாபாரி சடலம் மீட்பு

குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் வியாபாரியின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. பாலப்பள்ளம் பகுதி குப்பியன்தரையை சோ்ந்தவா் டேவிட்தாஸ் (50). இவா் அப்பகுதி... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் மைத்துனரை கடித்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை

கருங்கல் அருகே திப்பிரமலையில் குடும்பத் தகராறில் சமாதானம் பேச சென்ற மைத்துனரின் தாடையைக் கடித்து காயம் ஏற்படுத்திய இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்ப... மேலும் பார்க்க