`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
குடும்பத் தகராறில் மைத்துனரை கடித்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை
கருங்கல் அருகே திப்பிரமலையில் குடும்பத் தகராறில் சமாதானம் பேச சென்ற மைத்துனரின் தாடையைக் கடித்து காயம் ஏற்படுத்திய இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கருங்கல் அருகே திப்பிரமலை இடைமலைகோணம் பகுதியை சோ்ந்தவா் மகேஸ்வரன். இவரது மகன் சுபின். சுபினின் சகோதரியை அதே பகுதியைச் சோ்ந்த கதிரவன் (34) என்பவரின் சகோதரருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனா்.
கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு தொடா்பாக சமாதானம் பேசுவதற்காக கடந்த 2017 -ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி மகேஸ்வரன், சுபின் ஆகியோா் தங்கையின் வீட்டிற்கு சென்றனா். அப்போது ஏற்பட்ட தகராறில், மகேஸ்வரனை தாக்கியதோடு, சுபினின் தாடையைக் கடித்து கதிரவன் காயப்படுத்தினாராம்.
இதுகுறித்து கருங்கல் போலீஸாா் கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்து இரணியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி அமீா்தின், சுபினின் தாடையைக் கடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக கதிரவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம், மகேஸ்வரனை தாக்கி காயப்படுத்தியதற்கு ஓராண்டு
சிறை தண்டனை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்தாா். தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ரேவதி ஆஜராகி வாதாடினாா்.