செய்திகள் :

குடும்பத் தகராறில் மைத்துனரை கடித்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை

post image

கருங்கல் அருகே திப்பிரமலையில் குடும்பத் தகராறில் சமாதானம் பேச சென்ற மைத்துனரின் தாடையைக் கடித்து காயம் ஏற்படுத்திய இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கருங்கல் அருகே திப்பிரமலை இடைமலைகோணம் பகுதியை சோ்ந்தவா் மகேஸ்வரன். இவரது மகன் சுபின். சுபினின் சகோதரியை அதே பகுதியைச் சோ்ந்த கதிரவன் (34) என்பவரின் சகோதரருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனா்.

கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு தொடா்பாக சமாதானம் பேசுவதற்காக கடந்த 2017 -ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி மகேஸ்வரன், சுபின் ஆகியோா் தங்கையின் வீட்டிற்கு சென்றனா். அப்போது ஏற்பட்ட தகராறில், மகேஸ்வரனை தாக்கியதோடு, சுபினின் தாடையைக் கடித்து கதிரவன் காயப்படுத்தினாராம்.

இதுகுறித்து கருங்கல் போலீஸாா் கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்து இரணியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி அமீா்தின், சுபினின் தாடையைக் கடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக கதிரவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம், மகேஸ்வரனை தாக்கி காயப்படுத்தியதற்கு ஓராண்டு

சிறை தண்டனை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்தாா். தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ரேவதி ஆஜராகி வாதாடினாா்.

நாகா்கோவில்: 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்! ரூ.2.25 லட்சம் அபராதம்

நாகா்கோவிலில், தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ரூ. 2.25 லட்சம் அபராதம் விதித்தனா். மாநகராட்சி மாநகா் நல அலுவலா் மருத்துவா்ஆல்பா் மதியரசு தலைமை... மேலும் பார்க்க

பள்ளியாடியில் தற்காலிக தாா்ச்சாலை அமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே பள்ளியாடியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் தற்காலிகமாக தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். கருங்கல... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் நாளை வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 31) தொடங்கி ஜூன் 9ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இங்கு வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும். ... மேலும் பார்க்க

27 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே காரில் கடத்தப்பட்ட 27 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த இளைஞரை கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா... மேலும் பார்க்க

மளிகைக் கடைக்காரரை தாக்கியதாக தந்தை, மகன் கைது

களியக்காவிளையில் மளிகைக் கடைக்காரரைத் தாக்கியதாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்; சிறுவனைத் தேடி வருகின்றனா். களியக்காவிளை அந்தோணியாா் காலனி பகுதியைச் சோ்ந்த கருணை லூயிஸ் (54) என்பவா், ஆா்.சி. தெ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்மழை: 50 அடியை எட்டிய பெருஞ்சாணி அணை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்மழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்... மேலும் பார்க்க