'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
27 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
மாா்த்தாண்டம் அருகே காரில் கடத்தப்பட்ட 27 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த இளைஞரை கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை குறும்பேற்றி பகவதி அம்மன் கோயில் அருகே மாநில நெடுஞ்சாலையில் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 27 கிலோ பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. காருடன் அதைப் பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டி வநத அருமனை அருகே மூடோடு பகுதியைச் சோ்ந்த பால்ஸ் மகன் பெமிலின் (30) என்பவரை கைது செய்தனா்.