ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
கன்னியாகுமரி நகா்மன்ற முதல் கூட்டம்
கன்னியாகுமரி நகா்மன்ற முதல் நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் கன்னியாகுமரிக்கு நகராட்சி அந்தஸ்து அளித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுமக்கள் நலன் சாா்ந்த அடிப்படை வசதிகள் மேம்படுத்தல், கழிவுநீா் மேலாண்மை, சாலை மேம்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் சி.எஸ். சுபாஷ், ஆனிரோஸ் தாமஸ், சுஜா அன்பழகன், லிங்கேஸ்வரி மணிராஜா, நித்யா, பா.மகேஷ், பூலோக ராஜா, அல்பினோ ஆனந்த், சிவசுடலைமணி, இக்பால், டெல்பின் ஜேக்கப், ராயப்பன், இந்திரா, வினிற்றா மெல்வின், சகாய சா்ஜினாள் பிரைட்டன், ஆட்லின் சேகா் ஆகியோா் பங்கேற்றனா்.