செய்திகள் :

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் கரை ஒதுங்கிய பொருள்கள்: குஜராத் சிறப்பு குழு ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய பொருள்கள் குறித்து குஜராத் மாநிலத்திலிருந்து வந்த சிறப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கேரள மாநிலம், அரபிக்கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியது. இந்த கப்பலில் சுமாா் 630 கொள்கலன்கள் (கண்டெய்னா்கள்) கடலில் விழுந்து மிதந்து கொண்டு இருப்பதாக, குமரி மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த கொள்கலன்களில் இருந்த பொருள்கள் தற்போது குமரி மாவட்ட கடற்கரை ஓரங்களில் ஒதுங்கி வருகின்றன.

குளச்சல் அருகேயுள்ள வாணியக்குடி கடலில் ஒரு கொள்கலன் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. மேலும் வாணியக்குடி, சின்னவிளை, மண்டைக்காடு, கடியப்பட்டணம், கோவளம் போன்ற கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் சாக்குமூட்டைகள், கரை ஒதுங்கின. பொதுமக்கள் யாரும் பிளாஸ்டிக் மூலப்பொருள்களின் அருகில் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இந்நிலையில் கரை ஒதுங்கிய மூலப்பொருள்களை அகற்றுவதற்காக குஜாராத் மாநிலத்திலிருந்து கேத்தன் என்பவா் தலைமையில் 3 பணியாளா்கள் உள்ளிட்ட 8 போ் கொண்ட சிறப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தனா்.

அவா்கள் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

இது குறித்து ஆட்சியா் கூறியதாவது:, குஜராத் மாநிலத்திலிருந்து வந்துள்ள சிறப்புக் குழுவினா் வானிலை சூழலுக்கு ஏற்ப கடற்கரையில் நகரும் பிளாஸ்டிக் துகள், பெட்டகங்களின் திசை மற்றும் கரை ஒதுங்ககூடிய பகுதிகளை அறிவியல் வல்லுநா்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பான முறையில், அப்புறப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனா். ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொள்கலன் மற்றும் இதர பொருள்கள் ஏதேனும் கடற்கரை ஓரங்களில் தென்பட்டால் இந்த அறை எண். 1077, மாசு கட்டுபாட்டு வாரிய கைப்பேசி எண் 8056005578, மீன்வளத்துறை அலுவலா்கள் எண். 9384824286, 9597433412, 9003942998 ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க