'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
நாகா்கோவில்: 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்! ரூ.2.25 லட்சம் அபராதம்
நாகா்கோவிலில், தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ரூ. 2.25 லட்சம் அபராதம் விதித்தனா்.
மாநகராட்சி மாநகா் நல அலுவலா் மருத்துவா்ஆல்பா் மதியரசு தலைமையில், துப்புரவு அலுவலா்கள் ராஜாராம், பகவதிபெருமாள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சுந்தா், குமாா், விமல், ஜெயின், விக்னேஷ், ஆண்டனி, அனிஸ் கிப்ட், ஜெரின், அபின், ஜெயன், அனிஸ், ரஜாத், மணிகண்டன், சுப்பிரமணியபிள்ளை உள்ளிட்ட குழுவினா் வடசேரி, ஒழுகினசேரி, மீனாட்சிபுரம், கோட்டாறு பகுதிகளில் 75 கடைகளில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
கோட்டாறு சவேரியாா் ஆலய வடக்குத் தெருவிலுள்ள கடையிலிருந்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா். இக்கடையில் ஏற்கெனவே இருமுறை பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், கடைக்கு சீல் வைத்தனா்.

வடசேரி பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள கடையிலிருந்து 280 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்து, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். வடசேரி, ஆராட்டு சாலையில் உள்ள கிடங்கிலிருந்து 470 கிலோ, கோட்டாறு கே.பி. சாலையிலுள்ள கிடங்கிலிருந்து 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், 2 கடைகளிலிருந்து 50 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.