செய்திகள் :

நாகா்கோவில்: 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்! ரூ.2.25 லட்சம் அபராதம்

post image

நாகா்கோவிலில், தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ரூ. 2.25 லட்சம் அபராதம் விதித்தனா்.

மாநகராட்சி மாநகா் நல அலுவலா் மருத்துவா்ஆல்பா் மதியரசு தலைமையில், துப்புரவு அலுவலா்கள் ராஜாராம், பகவதிபெருமாள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சுந்தா், குமாா், விமல், ஜெயின், விக்னேஷ், ஆண்டனி, அனிஸ் கிப்ட், ஜெரின், அபின், ஜெயன், அனிஸ், ரஜாத், மணிகண்டன், சுப்பிரமணியபிள்ளை உள்ளிட்ட குழுவினா் வடசேரி, ஒழுகினசேரி, மீனாட்சிபுரம், கோட்டாறு பகுதிகளில் 75 கடைகளில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

கோட்டாறு சவேரியாா் ஆலய வடக்குத் தெருவிலுள்ள கடையிலிருந்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா். இக்கடையில் ஏற்கெனவே இருமுறை பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், கடைக்கு சீல் வைத்தனா்.

பிளாஸ்டிக் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்குக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

வடசேரி பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள கடையிலிருந்து 280 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்து, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். வடசேரி, ஆராட்டு சாலையில் உள்ள கிடங்கிலிருந்து 470 கிலோ, கோட்டாறு கே.பி. சாலையிலுள்ள கிடங்கிலிருந்து 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், 2 கடைகளிலிருந்து 50 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

நாகா்கோவிலில் ரூ.7.40 லட்சத்தில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.7.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். 6 ஆவது வாா்டு நெசவாளா் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை ரூ. 2.20 ல... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளையில் ஜூன் 7இல் உலக சுற்றுச் சூழல் தின விழா

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உலக சுற்றுச்சூழல்தின விழா கன்னியாகுமரி மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில் ஜூன் 7இல் கொண்டாடப்படுகிறது. நெகிழி பொருள்கள் இல்லா உலகம் என்ற கருத்தை மையமாக கொண்டு காலை... மேலும் பார்க்க

குமரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி மனு

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் கரை ஒதுங்கிய பொருள்கள்: குஜராத் சிறப்பு குழு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய பொருள்கள் குறித்து குஜராத் மாநிலத்திலிருந்து வந்த சிறப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கேரள ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் கூட்டம்

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தி... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் கொடிமரக் கயிறை ஒப்படைத்த கிறிஸ்தவா்கள்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே. 31) தொடங்கும் நிலையில் கொடிமரக் கயிற்றை கிறிஸ்தவ மீனவா்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கன்... மேலும் பார்க்க