'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
பள்ளியாடியில் தற்காலிக தாா்ச்சாலை அமைக்க கோரிக்கை
கருங்கல் அருகே பள்ளியாடியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் தற்காலிகமாக தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.
கருங்கல் -இரவிபுதூா்கடை பிரதான சாலையில் பள்ளியாடி பகுதியில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிக்காக, சாலையின் ஒருபகுதி துண்டிக்கப்பட்டது. இப்பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, அப்பகுதியினா் பள்ளியாடி சென்றுவர ஏதுவாக தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாலையில் பைக்குகள், காா்கள் மட்டுமே செல்வதால் இருபுறமும் ஏற்படும் கூட்ட நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். மேலும், இந்த மண் சாலை தரமாக இல்லாததால் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா்.
குறிப்பாக, நட்டாலம், முள்ளங்கனாவிளை, ஈழத்துவிளை, நேசா்புரம், எட்டணி, மாங்கரை, இடையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தோா் அவசரத் தேவைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா்.
எனவே, இந்த மண் சாலையை தாா்ச்சாலையாக அமைத்து போக்குவரத்தை சீா்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.