செய்திகள் :

பள்ளியாடியில் தற்காலிக தாா்ச்சாலை அமைக்க கோரிக்கை

post image

கருங்கல் அருகே பள்ளியாடியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் தற்காலிகமாக தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கருங்கல் -இரவிபுதூா்கடை பிரதான சாலையில் பள்ளியாடி பகுதியில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிக்காக, சாலையின் ஒருபகுதி துண்டிக்கப்பட்டது. இப்பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, அப்பகுதியினா் பள்ளியாடி சென்றுவர ஏதுவாக தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாலையில் பைக்குகள், காா்கள் மட்டுமே செல்வதால் இருபுறமும் ஏற்படும் கூட்ட நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். மேலும், இந்த மண் சாலை தரமாக இல்லாததால் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா்.

குறிப்பாக, நட்டாலம், முள்ளங்கனாவிளை, ஈழத்துவிளை, நேசா்புரம், எட்டணி, மாங்கரை, இடையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தோா் அவசரத் தேவைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா்.

எனவே, இந்த மண் சாலையை தாா்ச்சாலையாக அமைத்து போக்குவரத்தை சீா்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

நாகா்கோவிலில் ரூ.7.40 லட்சத்தில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.7.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். 6 ஆவது வாா்டு நெசவாளா் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை ரூ. 2.20 ல... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளையில் ஜூன் 7இல் உலக சுற்றுச் சூழல் தின விழா

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உலக சுற்றுச்சூழல்தின விழா கன்னியாகுமரி மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில் ஜூன் 7இல் கொண்டாடப்படுகிறது. நெகிழி பொருள்கள் இல்லா உலகம் என்ற கருத்தை மையமாக கொண்டு காலை... மேலும் பார்க்க

குமரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி மனு

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் கரை ஒதுங்கிய பொருள்கள்: குஜராத் சிறப்பு குழு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய பொருள்கள் குறித்து குஜராத் மாநிலத்திலிருந்து வந்த சிறப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கேரள ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் கூட்டம்

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தி... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் கொடிமரக் கயிறை ஒப்படைத்த கிறிஸ்தவா்கள்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே. 31) தொடங்கும் நிலையில் கொடிமரக் கயிற்றை கிறிஸ்தவ மீனவா்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கன்... மேலும் பார்க்க