குமரி கலைவிழா தொடங்கியது: 5 நாள்கள் நடைபெறுகிறது
தமிழக அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் 5 நாள்கள் நடைபெறும் குமரி கலை விழா புதன்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் காளீஸ்வரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு உணவு ஆணைய தலைவா் என். சுரேஷ்ரோஜன் முன்னிலை வகித்தாா். மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ் வரவேற்றாா்.
இவ்விழாவை, பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கலைகளை அழிந்து விடாமல் பாதுகாப்பது நமது கடமையாகும்.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் 5 நாள்கள் நடைபெறும் குமரி கலைவிழாவில் தமிழா்களின் கலாசாரம், பண்பாட்டை பறைசாற்றும் வகையில் நூற்றுக்கணக்கான கலைஞா்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனா். கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தமிழா்களுக்கு புகழ் சோ்த்தவா் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி.
இந்தச் சிலை அமைக்கப்பட்ட 25ஆவது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சியில் திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் மண்டபத்தை இணைக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்காா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இந்தப் பாலம் அமைக்கப்பட்ட பின்னா் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு உயா்ந்துள்ளது என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்லின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.