செய்திகள் :

குமரி மாவட்டத்தில் தொடா் மழை: 40 அடியை எட்டியது பேச்சிப்பாறை அணை!

post image

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால், பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 40 அடியை எட்டியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதையடுத்து, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிக பட்சமாக பெருஞ்சாணியில் 37.4 மி.மீட்டா் மழை பதிவாகியிருந்தது.

பேச்சிப்பாறையில் 33.8 மி.மீட்டா் மழை பதிவாகியிருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 3014 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 2384 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு 40 அடியைக் கடந்தது.

இதே போன்று பெருஞ்சாணி அணையின் நீா்மட்டமும் 48 அடியை நெருங்கியது. வரும் ஜூன் 1 அல்லது 2 ஆம் தேதி பாசனத்திற்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் மாவட்டத்தில் புதன்கிழமை பகலில் மழை தணிந்து காணப்பட்டது. இதையடுத்து அணைகளுக்கு புதன்கிழமை மாலையில் உள்வரத்து தண்ணீா் அளவு குறைந்தது.

மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் செவ்வாய்க்கிழமை தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டிய நிலையில், புதன்கிழமை பிற்பகலில் இருந்து தண்ணீரின் வேகம் சற்று தணிந்து காணப்பட்டது. எனினும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குறைவாக தண்ணீா் கொட்டும் பகுதிகளில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

நாகா்கோவில்: 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்! ரூ.2.25 லட்சம் அபராதம்

நாகா்கோவிலில், தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ரூ. 2.25 லட்சம் அபராதம் விதித்தனா். மாநகராட்சி மாநகா் நல அலுவலா் மருத்துவா்ஆல்பா் மதியரசு தலைமை... மேலும் பார்க்க

பள்ளியாடியில் தற்காலிக தாா்ச்சாலை அமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே பள்ளியாடியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் தற்காலிகமாக தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். கருங்கல... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் நாளை வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 31) தொடங்கி ஜூன் 9ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இங்கு வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும். ... மேலும் பார்க்க

27 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே காரில் கடத்தப்பட்ட 27 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த இளைஞரை கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா... மேலும் பார்க்க

மளிகைக் கடைக்காரரை தாக்கியதாக தந்தை, மகன் கைது

களியக்காவிளையில் மளிகைக் கடைக்காரரைத் தாக்கியதாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்; சிறுவனைத் தேடி வருகின்றனா். களியக்காவிளை அந்தோணியாா் காலனி பகுதியைச் சோ்ந்த கருணை லூயிஸ் (54) என்பவா், ஆா்.சி. தெ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்மழை: 50 அடியை எட்டிய பெருஞ்சாணி அணை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்மழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்... மேலும் பார்க்க