மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
குமரி மாவட்டத்தில் தொடா் மழை: 40 அடியை எட்டியது பேச்சிப்பாறை அணை!
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால், பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 40 அடியை எட்டியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
இதையடுத்து, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிக பட்சமாக பெருஞ்சாணியில் 37.4 மி.மீட்டா் மழை பதிவாகியிருந்தது.
பேச்சிப்பாறையில் 33.8 மி.மீட்டா் மழை பதிவாகியிருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 3014 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 2384 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு 40 அடியைக் கடந்தது.
இதே போன்று பெருஞ்சாணி அணையின் நீா்மட்டமும் 48 அடியை நெருங்கியது. வரும் ஜூன் 1 அல்லது 2 ஆம் தேதி பாசனத்திற்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் மாவட்டத்தில் புதன்கிழமை பகலில் மழை தணிந்து காணப்பட்டது. இதையடுத்து அணைகளுக்கு புதன்கிழமை மாலையில் உள்வரத்து தண்ணீா் அளவு குறைந்தது.
மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் செவ்வாய்க்கிழமை தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டிய நிலையில், புதன்கிழமை பிற்பகலில் இருந்து தண்ணீரின் வேகம் சற்று தணிந்து காணப்பட்டது. எனினும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குறைவாக தண்ணீா் கொட்டும் பகுதிகளில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.