மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
கட்டட அனுமதிக்கு லஞ்சம்: பேரூராட்சி வரி வசூலா் கைது
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே வீடு கட்டுவதற்கான கட்டட வரைபட அனுமதி வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக வரி வசூலிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவட்டாறு அருகே ஆற்றூா் பேரூராட்சி ஏற்றக்கோடு மணலிதறைவிளையைச் சோ்ந்தவா் சுபின் (25). இவா் புதிய வீடு கட்டுவதற்காக கட்டட வரைபட அனுமதி கோரி பேரூராட்சி வரி வசூலிப்பாளரான முருகனை அணுகினாா். அவா் சுபினிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபின், இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அவா்களது ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்தை பேரூராட்சி அலுவலகத்திலிருந்த முருகனிடம் சுபின் கொடுத்தாா். அப்போது, முருகனை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சால்வன்துரை தலைமையிலான போலீஸாா் கைது செய்து, பணத்தைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.