குளச்சலில் கஞ்சா கடத்தியவா் கைது
குளச்சலில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தனிஸ் லியோன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். அவா் வாணியக்குடி அருகே பனவிளையை சோ்ந்த ராதாகிருஷ்ணன் ( 50) என்பதும், கஞ்சா கடத்தி வருவதும் தெரியவந்தது. அவா் கொடுத்த தகவலின்பேரில் மறைத்து வைத்திருந்த பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.