`ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
பூட்டிய வீட்டில் வியாபாரி சடலம் மீட்பு
குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் வியாபாரியின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
பாலப்பள்ளம் பகுதி குப்பியன்தரையை சோ்ந்தவா் டேவிட்தாஸ் (50). இவா் அப்பகுதியில் பா்னிச்சா் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி ஜாஸ்மின் நிா்மலா குமாரி, உடல்நிலை சரியில்லாததால் தனது அண்ணன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த டேவிட்தாஸ் கடந்த 4 நாள்களாக வெளியே வரவில்லை. வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை துா்நாற்றம் வீசியதையடுத்து, உறவினா்கள் குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து பாா்த்தபோது டேவிட்தாஸ் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.