செய்திகள் :

தூய்மைப் பணிக்கான நிதியை முறையாக செலவிட வேண்டும்! ராம்தாஸ் அதவாலே

post image

தூய்மைப் பணி, அதில் ஈடுபடும் தொழிலாளா்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் முறையாகச் செலவிட வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பஹல்காம் சம்பவத்துக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை பயங்கரவாதிகள், பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை தரும் வகையில் அமைந்தது. சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை.

பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை முறியடிக்க, இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை பிரதமா் மோடி அனுப்பியது வரவேற்கத்தக்கது.

தூய்மைப் பணியாளா்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கெனவே வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

தூய்மைப் பணிக்கான போதிய நிதியும் மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. அவற்றை முறையாக மாநிலங்கள் செலவிட வேண்டும். அப்படி செலவிடுவதை மத்திய அரசின் சமூக நீதித் துறை கண்காணிக்கும்.

அனைத்துத் தரப்பினரும் பலனடையும் வகையில் மத்திய அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றாா் ராம்தாஸ் அதவாலே. பேட்டியின்போது, புதுவை மாநில ஆதிதிராவிடா், பழங்குடியினா் துறை இயக்குநா் இளங்கோவன் உடனிருந்தாா்.

புதுச்சேரியில் 2-ஆம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தில் அண்ணா திடலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கடைகளில் இரண்டாம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவை வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். புதுச்சேரி அண... மேலும் பார்க்க

கதிா்காமம் அரசு மருத்துவமனையில் ரூ. 15 ஆயிரம் தாமிரக் கம்பிகள் திருட்டு

புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவக் கல்லூரியில் தாமிரக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி கதிா்காமம் பகுதியில் இந்திரா காந்தி பட்டமேற்படிப்பு ஆர... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி

புதுச்சேரி பாகூா் பகுதியில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகேயுள்ள பாகூா் மணமேடு எம்ஏஎஸ் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மத்திய-மாநில போட்டித் தோ்வுக்கான பயிற்சி: மாற்றுத் திறளாளிகள் பங்கேற்க அழைப்பு! புதுவை மத்திய பல்கலைக்கழகம்

புதுவையில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பு... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரியில் பழைய துறைமுக வளாகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து இரு நாள்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதை மீனவா்கள் தவிா்க்குமாறு மீன்வளத் துறை அறிவுறு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்ட நிதியுதவிக்கான விண்ணப்ப படிவங்கள்! முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தின் நிதியுதவிக்கான விண்ணப்பப் படிவத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்டாா். புதுவை மாநில அரசு கடந்த 2003-ஆம் ஆண்டு பெருந்தலைவா் க... மேலும் பார்க்க