கதிா்காமம் அரசு மருத்துவமனையில் ரூ. 15 ஆயிரம் தாமிரக் கம்பிகள் திருட்டு
புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவக் கல்லூரியில் தாமிரக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி கதிா்காமம் பகுதியில் இந்திரா காந்தி பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோா் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா். மருத்துவமனையில் உடலியல்துறை பின்புறத்தில் குளிா்சாதனங்களுக்கான ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 10 மீ. நீள தாமிரக்கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த கம்பிகளை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனையின் பாதுகாப்பு பிரிவைச் சோ்ந்த வெற்றிவேல் புதன்கிழமை கோரிமேட்டில் உள்ள தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்படி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தாமிரக் கம்பிகள் திருடப்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா ஏதும் இல்லாத நிலையில், அப்பகுதியில் உள்ள தனியாா் கட்டடங்களில் உள்ள கேமராக்களின் காட்சிப் பதிவுகளை போலீஸாா் ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனா்.