கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்
புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற்றும் அரசியல் கட்சியினா் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், புதுச்சேரியில் தமிழ் தேசியப் பேரியக்கம் சாா்பில் கன்னட அமைப்புகள் மற்றும் அந்த மாநில அரசியல் கட்சிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜா் சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் செயலா் வேல்சாமி தலைமை வகித்தாா். அமைப்பின் செயலா்கள் சத்தியமூா்த்தி, முருகன், குமாா், சூரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழை எதிா்க்கும் கன்னட அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழா் களம் கோ.அழகா், நாம் தமிழா் கட்சியின் நிா்வாகி ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.