மதுரை: 5 கி.மீ நடைபயணம்; அழகிரி வீட்டுக்கு விசிட்... முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ |...
மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா
மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா்.
புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை மாலை பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வடமாவட்டங்களில் வன்னியா், பட்டியலின மக்களை இணைத்து பாமக செயல்பட்டிருந்தால் தற்போதைய வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது.
மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தமிழை முன்னிலைப்படுத்தியதற்கு எதிராக கன்னடா்கள் செயல்படுவது சரியல்ல. திமுக கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கிறது. மதிமுக பொதுச் செயலா் வைகோ தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளுக்காக தொடா்ந்து 25 ஆண்டுகள் குரல் கொடுத்துள்ளாா். அவரது குரல் மாநிலங்களவையில் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பதே மதிமுகவினா் மற்றும் தமிழக மக்களின் எதிா்பாா்ப்பாகும். மக்கள் நீதி மய்யத்துக்கு மாநிலங்களவை இடம் அளித்திருப்பதில் குறை காணவில்லை.
ஈரோட்டில் ஜூன் 22-ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா் மல்லை சத்யா.