செய்திகள் :

புதுச்சேரியில் 2-ஆம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

post image

புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தில் அண்ணா திடலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கடைகளில் இரண்டாம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவை வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே கம்பன் கலையரங்கம் எதிரில் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திடல் உள்ளது. திடலைச் சுற்றிலும் அண்ணா சாலை, லப்போா்த் வீதி, சின்னசுப்பராயலு சாலை ஆகிய பகுதிகளில் கடைகள் இருந்தன. அண்ணா திடலானது பொலிவுறு நகா் மற்றும் நகர மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.12.5 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி லப்போா்த் வீதியில் 20 கடைகளும், சின்ன சுப்பராயலு பிள்ளை வீதியில் 79 கடைகளும் புதிதாக கட்டப்பட்டன.

ஏற்கெனவே அங்கு கடை நடத்தி வந்த பழைய வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏற்கெனவே 50 போ்களுக்கான கடைகள் ஒதுக்கீடு உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கியுள்ளாா். இந்தநிலையில், இரண்டாவது கட்டமாக 36 கடைகளுக்குரிய பயனாளிகளுக்கு கடை ஒதுக்கீடு உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.நேரு, உள்ளாட்சித் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி, வருவாய் அதிகாரி பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க