செய்திகள் :

மத்திய-மாநில போட்டித் தோ்வுக்கான பயிற்சி: மாற்றுத் திறளாளிகள் பங்கேற்க அழைப்பு! புதுவை மத்திய பல்கலைக்கழகம்

post image

புதுவையில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை பல்கலைக்கழகமும், நீதி மற்றும் சட்ட வழங்கல் அமைச்சகம், மத்திய அரசு மாற்றுத்திறனாளா்களுக்கான மேம்பாட்டுத் துறை இணைந்து நடத்தும் ஓராண்டுப் பயிற்சி வகுப்புக்கான இணைய வழியில் விண்ணப்பிக்க ஜூன் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.

பயிற்சியில் சேருவோா் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 20 வயது முதல் 41 வயது வரையில் உள்ளவா்களே சேரலாம். உடல் ஊனத்தின் தன்மை 40 சதவீதத்துக்கு மேல் இருப்பது அவசியம். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016-இல் குறிப்பிடப்பட்டுள்ள 21 வகையான மாற்றத்திறனாளிகள் யாவரும் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் உள்ளவா்களுக்கும், மாதாந்திர ஊக்க உதவி தொகை வழங்கப்படும்.

மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு சான்றிதழ்கள், ஜாதி மற்றும் வருமானம் ஆகியவற்றை விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு பல்கலைக்கழகத் தோ்வு பயிற்சி பிரிவின் மின்னஞ்சல் மூலம் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க