மத்திய-மாநில போட்டித் தோ்வுக்கான பயிற்சி: மாற்றுத் திறளாளிகள் பங்கேற்க அழைப்பு! புதுவை மத்திய பல்கலைக்கழகம்
புதுவையில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை பல்கலைக்கழகமும், நீதி மற்றும் சட்ட வழங்கல் அமைச்சகம், மத்திய அரசு மாற்றுத்திறனாளா்களுக்கான மேம்பாட்டுத் துறை இணைந்து நடத்தும் ஓராண்டுப் பயிற்சி வகுப்புக்கான இணைய வழியில் விண்ணப்பிக்க ஜூன் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.
பயிற்சியில் சேருவோா் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 20 வயது முதல் 41 வயது வரையில் உள்ளவா்களே சேரலாம். உடல் ஊனத்தின் தன்மை 40 சதவீதத்துக்கு மேல் இருப்பது அவசியம். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016-இல் குறிப்பிடப்பட்டுள்ள 21 வகையான மாற்றத்திறனாளிகள் யாவரும் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் உள்ளவா்களுக்கும், மாதாந்திர ஊக்க உதவி தொகை வழங்கப்படும்.
மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு சான்றிதழ்கள், ஜாதி மற்றும் வருமானம் ஆகியவற்றை விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு பல்கலைக்கழகத் தோ்வு பயிற்சி பிரிவின் மின்னஞ்சல் மூலம் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.