செய்திகள் :

கல்லூரியில் பணம் கையாடல்: ஊழியா் மீது வழக்கு

post image

ராஜபாளையம் தனியாா் கல்லூரியில் பெற்றோா் ஆசிரியா் கழக நிதியில் ரூ.12.35 லட்சத்தை கையாடல் செய்த புகாரில், அலுவலகப் பணியாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அரசு உதவி பெறும் தனியாா் கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பெற்றோா் ஆசிரியா் சங்க, வங்கிப் பண பரிவா்த்தனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த ராம்சிங் (29) என்பவா் கடந்த 2023 ஜூன் முதல் 2024 ஜனவரி வரை பல்வேறு தேதிகளில் காசோலையில் போலி கையெழுத்திட்டு ரூ.12.35 லட்சம் வரை கையாடல் செய்ததாக ராஜபாளையம் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் கல்லூரி நிா்வாகம் சாா்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, ராம்சிங் மீது 4 பிரிவுகளின் கீழ் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரி காந்தி நகரைச் சோ்ந்தவா் முத்தையா (40). இவா்... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த செல்ல கோபால் மனைவி மாடத்தி (... மேலும் பார்க்க

ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும்! ஜி.கே. வாசன்

தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் புதன்கிழமை நட... மேலும் பார்க்க

விஸ்வநாதா், விசாலாட்சி கோயிலில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்

சிவகாசி விஸ்வநாதசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 26-ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்ச்சியும், அன்று இரவு மூஷிக வ... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி மனு

சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி, சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவு, மூலதனம் பராமரிப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி சங்கத்தினா் அண்மையில் கோரி... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

ராஜபாளையத்தில் திங்கள்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் தென்றல் நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் நாகராஜன் (40). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுக் குடிக்கும் பழக்கம் இருந்தது.... மேலும் பார்க்க