வளா்பிறை முகூா்த்தம்: திருச்செந்தூா் கோயிலில் அலைமோதிய கூட்டம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வளா்பிறை முதல் முகூா்த்தத்தையொட்டி புதன்கிழமை ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.
இத் திருக்கோயிலில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமும், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி இலவச தரிசனம், ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்தகுடிமக்கள் வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
வைகாசி மாதம் வளா்பிறை முதல் முகூா்த்த நாள் என்பதால் திருக்கோயில் சண்முக விலாசம் மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. மேலும், நகா் பகுதியிலு ம் அதிகளவில் திருமணங்கள் நடைபெற்ால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
3 தினங்களில் கோடை விடுமுறை முடிவடைவதால், திருக்கோயில் வளாகம் மற்றும் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.