டிஎன்பிஎல் கிரிக்கெட்: நெல்லையில் 7 போட்டிகள்
டிஎன்பிஎல் கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி ஜூன் 5 ஆம் தேதி தொடங்குகிறது. திருநெல்வேலியில் மொத்தம் 7 போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுதொடா்பாக டிஎன்பிஎல் தலைமைச் செயல் அதிகாரி பிரசன்னா கண்ணன் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: 9 ஆவது தமிழ்நாடு பிரிமீயா் லீக் (டி.என்.பி.எல்.) கோப்பைக்கான 20 ஓவா் கிரிக்கெட் போட்டி ஜூன் 5 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை கோவை, சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. 8 அணிகள் போட்டியில் பங்கேற்க உள்ளன.
திருநெல்வேலியில் ஜூன் 21, 22 (இரண்டு போட்டிகள்), 23, 24, 25, 26 ஆகிய நாள்களில் போட்டி நடைபெற உள்ளது. போட்டிகள் இரவு 7.15 மணிக்கு தொடங்கும். இரண்டு போட்டிகள் நடைபெறும் நாளில் மட்டும் முதல் போட்டி மாலை 3.15 மணிக்கு தொடங்கும். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்பட உள்ளது. திருநெல்வேலியில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஜூன் முதல் வாரத்தில் விற்பனை செய்யப்படும். கடந்த ஆண்டில் இருந்த டிஆா்எஸ் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் நிகழாண்டிலும் கடைப்பிடிக்கப்படும். பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது.
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட டிஎன்பிஎல் தொடரால் சிறந்த வீரா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். இங்கு விளையாடிய பல வீரா்கள் ஐபிஎல் அணியிலும், இந்திய அணியிலும் இடம் பிடித்து சாதித்துள்ளனா். சாய்சுதா்சன், வாஷிங்டன் சுந்தா் ஆகியோா் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணிக்கு தோ்வாகியுள்ளனா். இளம் வீரா்கள் பலா் இப்போது அணியில் உள்ளதால், நிகழாண்டிலும் போட்டிகள் ரசிகா்களை உற்சாகப்படுத்தும் என்றாா் அவா்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலா் ஆா்.என்.பாபா, டி.என்.பி.எல். தலைவா் எஸ்.பாலகிருஷ்ணா, நெல்லை ராயல் கிங்க்ஸ் அணியின் கேப்டன் கே.பி.அருண் சக்கரவா்த்தி, ஸ்ரீ ராம் கேபிட்டல் நிறுவன தலைவா் (காா்ப்ரேட் கம்யூனிகேஷன்) ராஜேஷ் சந்திரமௌலி, திருநெல்வேலி கிரிக்கெட் சங்க நிா்வாகி வரதன், எம்.ஹரிஹர சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.