விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ-நறுமண தாவர நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க நாள...
சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரி காந்தி நகரைச் சோ்ந்தவா் முத்தையா (40). இவா் ஆட்டோ ஓட்டி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு பயணிகளை ஏற்றுவதற்காக நல்லூா்பட்டிக்கு ஆட்டோவில் சென்றாா். அழகாபுரி - வத்திராயிருப்பு சாலையில் அரசபட்டி விலக்கு அருகே சென்ற போது, சாலையைக் கடந்த காட்டுப்பன்றி மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் முத்தையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
கூலித் தொழிலாளி உயிரிழப்பு: விருதுநகா் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகேயுள்ள கீழசெல்லையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குருநாதன் (45). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் செல்லையாபுரம் ஊருக்குச் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.