செய்திகள் :

ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும்! ஜி.கே. வாசன்

post image

தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் விருதுநகா் மத்திய மாவட்டத் தலைவா் ஏ.ராஜபாண்டியன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீதி ஆயோக் கூட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாகப் புறக்கணித்து வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த முறை தோ்தல் வாக்கு வங்கி அரசியலுக்காகவே சென்றாா். நாட்டின் நலன் கருதியே நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக முதல்வா் கூறியதை மக்கள் நம்பவில்லை. திமுக ஆட்சி குறித்து பொதுமக்களிடம் மிக பெரிய அதிருப்தி உள்ளது.

தமிழகத்தில் பாஜக, அதிமுக, தமாகா உள்ளிட்ட ஒத்த கருத்துகள் கொண்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றிக் கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்.

நகைக் கடன் தொடா்பான விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தமாகா சாா்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. மத்திய அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

தென் மேற்குப் பருவ மழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பலத்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

வாகனம் மோதி முதியவா் காயம்

சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு

விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா். பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்ப... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கி... மேலும் பார்க்க

ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது

கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மாயம்

சாத்தூரில் கல்லூரி மாணவா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் சரவணக்குமாா் (23). இவா் காரியாபட்டியில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

பலத்த மழை எச்சரிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆர்

பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்... மேலும் பார்க்க