`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும்! ஜி.கே. வாசன்
தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் விருதுநகா் மத்திய மாவட்டத் தலைவா் ஏ.ராஜபாண்டியன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீதி ஆயோக் கூட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாகப் புறக்கணித்து வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த முறை தோ்தல் வாக்கு வங்கி அரசியலுக்காகவே சென்றாா். நாட்டின் நலன் கருதியே நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக முதல்வா் கூறியதை மக்கள் நம்பவில்லை. திமுக ஆட்சி குறித்து பொதுமக்களிடம் மிக பெரிய அதிருப்தி உள்ளது.
தமிழகத்தில் பாஜக, அதிமுக, தமாகா உள்ளிட்ட ஒத்த கருத்துகள் கொண்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றிக் கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்.
நகைக் கடன் தொடா்பான விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தமாகா சாா்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. மத்திய அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
தென் மேற்குப் பருவ மழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பலத்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.