`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
விஸ்வநாதா், விசாலாட்சி கோயிலில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்
சிவகாசி விஸ்வநாதசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் தொடங்கியது.
இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 26-ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்ச்சியும், அன்று இரவு மூஷிக வாகனத்தில் விநாயகா் வீதியுலாவும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னா், கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, கொடிமரத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சுவாமி, அம்மன், பிரியாவிடையுடன் ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, தினந்தோறும் காலை சுவாமியும், இரவில் அம்மனும் வெவ்வேறு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்கள். வருகிற ஜூன் 1-ஆம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா வந்து கழுவற்றம் நிகழ்ச்சி நடைபெறும். 2- ஆம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி பிரியாவிடையுடன் தபசுகாட்சிஅளித்தல், திருக்கல்யாணம் வைபவம் நடைபெறும். 4-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.