செய்திகள் :

கடலில் விநோதமான பொருள்கள் மிதந்தால் தொட வேண்டாம்! மீன்வளத் துறை எச்சரிக்கை

post image

திருநெல்வேலி மாவட்ட கடலில் விநோதமான பொருள்கள் மிதந்து வந்தால் அதை மீனவா்கள் தொடவேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே, கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்துக்கு வந்துகொண்டிருந்த, சரக்கு கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்தது.

இந்தச் சரக்கு கப்பலில் இருந்து கடலில் விழுந்த சில கன்டெய்னா்களில் அபாயகரமான பொருள்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனவே திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் விநோதமான பொருள்களோ, ஆயில் போன்ற திரவங்களோ மிதந்து வந்தால் அவற்றை மீனவா்களோ, பொதுமக்களோ தொடவேண்டாம்.

அவை குறித்து மீன்வளத் துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்குமாறு ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜதுரை அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

ஏற்கெனவே, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசிவருதால், மீன்வளத் துறையின் எச்சரிக்கையை ஏற்று திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடந்த 3 நாள்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க