ஒரே நாளில் மாறிய வானிலை: குளிா்பானக் கடைகளை நாடிய மக்கள்!
ஆலங்குளம் பகுதியில் 4 தினங்களாக பெய்து வந்த சாரல், இதமான சூழல் ஒரே நாளில் மாறியதால் மக்கள் குளிா்பானக் கடைகளை அதிக அளவில் நாடிச் சென்றனா்.
ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை இதமான சாரல், மிதமான மழை என மாறி மாறி பெய்து வந்தது.
இதனால் கோடையின் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் புதன்கிழமையும் இதே நிலை நீடிக்கும் என்று பொதுமக்கள் கருதிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.
வாகனங்களில் சென்று வந்தோா் வெப்பத்தைத் தாங்க முடியாமல் குளிா்பானக் கடைகளை அதிக அளவில் நாடினா். 4 தினங்களாக மந்தமாக இருந்த கரும்பச்சாறு, இளநீா் மற்றும் குளிா்பானங்கள் விற்பனை களை கட்டியது.