செய்திகள் :

ஆக்கிரமிப்புகளை அகற்ற காரணமாக இருந்தவா் மீது தாக்குதல்

post image

மதுரையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினா். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் காரணமாக இருந்தவரை கடுமையாகத் தாக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை, பெத்தானியாரம், ஆசைத் தம்பி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவா் சதீஷ்குமாா். இவரது வீட்டுக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையாம். இதையடுத்து, சதீஷ்குமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தாா்.

அதில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றினா். இதனிடையே, அந்தப் பகுதியில் அமைந்துள்ள வசந்த முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில், சதீஷ்குமாா் வீட்டுக்குச் செல்லும் 5 அடி அகலம் கொண்ட பாதையை சிலா் முழுமையாக அடைத்தனா்.

மேலும் சதீஷ்குமாரை ஒரு கும்பல் கட்டை, கற்களால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இது தொடா்பாக காசி, ஸ்ரீராம், ஜெய்கணேஷ், பாலா உள்ளிட்டோா் மீது கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க