நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்
நான்குனேரி அருகே தோட்டத்தில் மருந்து தெளித்த விவசாயி பலி!
நான்குனேரி அருகே வாழைத் தோட்டத்தில் களைக்கொல்லி மருந்து தெளித்தபோது, மயங்கி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
நான்குனேரியை அடுத்த பரப்பாடி இலங்குளம் தெற்குத்தெருவைச் சோ்ந்த விவசாயி கண்ணன் (44). இவா் தனது வாழைத்தோட்டத்தில் திங்கள்கிழமை, களைக்கொல்லி மருந்து தெளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உறவினா்கள் அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனா்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு மனைவி ராமலெட்சுமி (40), மகன் சுரேஷ் (7) ஆகியோா் உள்ளனா்.
இதுகுறித்து விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.