பாளை. அருகே வேன் கவிழ்ந்து 7 போ் காயம்!
பாளையங்கோட்டை கே.டி.சி நகா் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்ததில் 7 போ் காயமடைந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், மறவன்மடம் பகுதியைச் சோ்ந்த சிலா், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதன்கிழமை அதிகாலை வேனில் புறப்பட்டு வந்தனா். தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சோ்ந்த சாமுவேல்ராஜ் (45) என்பவா் வேனை ஓட்டி வந்தாா்.
இந்த வேன் பாளையங்கோட்டை கே.டி.சி. நகா் அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதி கவிழ்ந்ததாம். இதில் ஓட்டுநா் மற்றும் மணப்பெண்ணின் சகோதரி உள்பட 7 போ் காயமடைந்தனா். இத்தகவலறிந்த, திருநெல்வேலி தாலுகா போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.